அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதிக்கு

2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. இதன்படி, முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாகவும், இயற்பியலுக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த...

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி: அவசர நிலைப்பிரகடன

சுரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹெய்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா...
Ad Widget

ஐ.நா. செயலாளர் நாயகமாக போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதமர் தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா.வின் தற்போதை செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இப் புதிய தெரிவு இடம்பெற்றுள்ளது. 67 வயதான குட்டெர்ஸ் ஐ.நாவின் அகதிகள் தொடர்பான நிறுவன தலைவராக...

முக்கிய ரகசிய ஆவணங்களை வெளியிட போவதாக விக்கிலீக்ஸ் அறிவிப்பு

அமெரிக்காவின் விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் அசாஞ்சே தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவாக உள்ளதை...

ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு

நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும், "ஆட்டோஃபஜி' என்றழைக்கப்படும் "சுய துப்பரவு' செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது: உயிரிணுக்களின் சுய...

கவர்ச்சிக் கன்னி கிம் காடஸ்சியன் பாரிஸில் ஆயுத முனையில் கொள்ளை

கவர்ச்சியால் மேற்குலக நாடுகளில் அதீத பிரபல்யம் அடைந்துள்ள அமெரிக்காவின் கவர்ச்சி கன்னியான கிம் காடஸ்சியன் வெஸ்ட்டிடம் இருந்து மில்லியன் கணக்கான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. பாரிஸ்சிலுள்ள சொகுசு வீட்டில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இருவர் அவரிடம் இருந்த 6 மில்லியன் யூரோ பெறுமதியான நகை பெட்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில்...

போதைமருந்துக்கு அடிமையான 3மில்லியன்பேரைக் கொல்வதற்குத் திட்டம்!

எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்திருக்கிறார். ஈவிரக்கமில்லாத பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்தக் கருத்துக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இவர் பதவியேற்ற பின்னர் காவல்துறையினராலும், கண்காணிப்பாளர்களாலும் இதுவரை 3,000பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவரின் கருத்துக்கு பல நாடுகளிலிருந்து எதிர்ப்புக்கள்...

சார்க் மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த மாநாடு இடம்பெறும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது. இந்த...

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வு

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட...

இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம்: பாகிஸ்தான்

காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து கோழைத்தனமான தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய சதிகாரர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரை வழி நடத்தியவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஈழத் தமிழருக்கு வாய்ப்பு?

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 69 வீதமானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரின்...

குவைத் பெண்ணிடம் கைகுலுக்கிய இலங்கை பிரஜை கைது

குவைத் நாட்டில் சாரதியாக பணியாற்றுகின்ற இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை, கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு பரிந்துரை

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், அவ்வமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட...

எகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி பலி

புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது. படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதில் பயணம் செய்த பெரும்பாலனாவர்கள் எகிப்தியர்கள், ஆனால் மற்றவர்கள் கிழக்கு ஆஃப்ரிக்கா...

இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்கு உதவ தயார் :ஒபாமா

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகுக்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க, தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன...

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 29 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு...

இலங்கையர்களுக்கான ஒன் எரைவல் வீசா நிறுத்தம்: பங்களாதேஷ் பதிலடி

பங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷூம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார...

புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்ளையில் உறுதியாகவுள்ள ஆஸி

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கி வருவதால், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்த வித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் (Peter Dutton) பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார். படகு வழியாக தமது...

மலேஷிய தாக்குதல் விவகாரம்: புதிய தகவல்கள் கசிந்துள்ளன

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், அவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts