யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அட்டகாசம்!

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வாள், கைக்கோடரி மற்றும் இரும்பு கம்பிகளுடன் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்று நேற்று முன்தினம் வர்த்தக நிலையப் பணியாளர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் பல்சர் வகை உந்துருளியில் சில்வர் கலர் கோடரி மற்றும் வாள்களுடன்...

ரயிலில் பயணித்த மாணவன் வைத்தியசாலையில்

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வெளியில் எட்டிப் பார்த்தபோது, மின்கம்பத்துடன் முகம் அடிபட்டதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தாரக டுலாஜ் எனற மாணவனே படுகாயமடைந்தார். காங்கேசன்துறை தல்சேவன விருந்தினர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, நண்பர்களுடன் ரயிலில் பயணித்துக்...
Ad Widget

சம்பந்தனுக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை-முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், எனக்கும் எவ்வித பனிப்போரும் இல்லை. எனது உடல் ஆரோக்கியமற்றுள்ளது. மருத்துவ உதவியை நாடியிருப்பதால்தான், சம்பந்தனை சந்திக்க முடியாமல் போனது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய மாநாடு வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இந்நிகழ்வு...

நகரைக் குளிர்மைப்படுத்தும் யாழ். மாநகர சபை

யாழ். நகர்ப் பகுதியிலுள்ள வீதிகளை வெப்பத்திலிருந்து தணிக்கும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அஞ்சும் நிலைமை காணப்படுகின்றது. அதிக மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் யாழ்ப்பாண நகர வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் வெப்பம் காணப்படுகின்றது. இதனைத் தணிக்கும் வகையில்...

விண்ணப்பம் கோரல்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடக வேலைத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஊடகத்துறையில் ஆர்வமும் விருப்பும் கொண்ட இளம் ஊடகவியலாளர்களை வலுவூட்டும் நோக்கில் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஊடக வேலைத்திட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்காக, நேர்முகப்பரீட்சை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலங்களில் ஒரு பிரிவில் 50 பேருக்கு விரிவுரைகள் மற்றும் செயன்முறை...

டக்ளஸ் வராததால் ‘நினைவுத்தூபி’ ஒத்திவைப்பு

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான, எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத்...

கடற்படையினர் உதவியுடன் அந்தோனியார் ஆலயம் புனரமைப்பு

யாழ்பாணத்தில் உத்தர கடற்படை முகாமின் வளாகத்திற்குள் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை புனரமைப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவி வழங்கியுள்ளனர். முற்றிலும் புனர்நிர்மாணம் செய்ததுடன் திருப்பலியும் அண்மையில் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன் இதில் கத்தோலிக்க பக்தர்கள் மற்றும் தென் கடற்படையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் ஆகியோர் பங்குகொண்டனர். திருப்பலியை அருட்தந்தை சுனில் குமார் பீரிஸ் ஒப்புக்கொடுத்தார்....

வடக்கு மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வேதனையளிக்கிறது

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். வேம்படி மகளிர் கல்லூயில் நேற்று காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாநாட்டில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். எதிர்கால மாணவர்களின் கல்வியும் வளமான சமுதாயமும் என்னும் தொனிப் பொருளிலான இம்மநாட்டில் யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சுமார்...

ஆளுநர் அல்ல அந்த ஆண்டவனே சொன்னாலும் வடக்கில் மேலதிகமாக இராணுவம் இருக்க முடியாது. அமைச்சர் பொ.ஐங்கரநேசன்!

கிளிநொச்சி கால்நடை சுகாதார பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்தில், மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு  புதன் கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கில் இருந்து இராணுவத்தை அனுப்புவதல்ல நோக்கம், இராணுவத்தை கொண்டு தமிழ் மக்கள் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...

யாழ்ப்பாண கல்வி வலய ஆசிரிய மாநாடு

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் ஆசிரிய மாநாடு, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் நடராஜா தெய்வேந்திரராஜா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இன்றும் நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ள இந்த ஆசிரிய மாநாட்டில் கல்விக் கண்காட்சியும் இடம்பெறுகின்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்....

நாடு திரும்பிய 12 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது

படகு ஒன்றின் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்கள் 12 பேர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமான ஒன்றின் மூலம் அழைத்து வரப்பட்ட குறித்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஜாயல பகுதியைச் சேர்ந்த...

சமஷ்டியைத் தோற்கடிக்கவா புதிய அரசியல் கூட்டணி?

சமஷ்டித் தீர்வு திட்டத்திற்கு எதிராக செயற்படுவதற்கா புதிதாக, ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வட மாகாண சபையும், தமிழ் மக்கள் பேரவையும் தேசிய இனப்பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி...

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா ஓய்வு!

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா நேற்று (வியாழக்கிழமை) இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்றுடன் 55 வயதை எட்டியுள்ள அவர் இராணுவத்திலிருந்து ஓய்வினைப் பெற்று வீடு சென்றுள்ளார். 1984ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த இவர் 33 ஆண்டுகளாக இராணுவத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இறுதிப்போரின்போது...

வவுனியா ஜோசப் முகாமுக்குள் புகுந்து ஐநா அதிகாரி சோதனை!

சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியாவில் இயங்கும் இராணுவத்தினரின் ஜோசப் சித்திரவதை முகாமுக்குள் சென்று சோதனை நடாத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும் ஜோசப் முகாமில் கடந்த காலங்களில் பலர் இரகசியமாகத் தடுத்துவைத்து படுகொலைகள் செய்யப்பட்டதாகவும், இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதாகவும் அடிப்படையில் அது ஒரு சித்திரவதை முகாம்...

தனியார் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு!

தனியார் பேருந்துக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் பெறுமதிசேர் வரி (வற்) அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களினால் மருதானை சனசமூக நிலையத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பந்தலில் மின்கசிவு: ஒருவர் பலி

சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒருவர், வியாழக்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். தண்ணீர்ப்பந்தலில் ஏற்பட்ட மின் கசிவால் 7 பேர் மின்சார தாக்கத்துக்கு உள்ளாகினர். இதில் எஸ்.சொர்ணகுமார் (வயது 42) என்ற 1 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது....

ஆணின் சடலம் மீட்பு!

வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் சர்வேஸ்வரன் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளது. புதன்கிழமை (04) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா?...

படகு மூலம் ஆஸி. சென்ற 12 பேர் திரும்பினர்

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 12 பேர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட விமானத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் 9 ஆண்களும் அடங்குகின்றனர். பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கணவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்கெனவே சென்று திருப்பி அனுப்பிய நிலையில் அவர்கள் மீண்டும் கடந்த ஏப்ரல்...

பாடசாலை மாணவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு,...

அம்பாறைப் போராட்டத்தைக் குழப்பியது சிங்க லே! அச்சுறுத்தலால் பதற்றம்

முன்னாள் போராளிகளின் திடீர் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 'சிங்க லே' அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர். பொலிஸார் முன்பாகவே சிங்கலே அமைப்பினர், போராட்டக்காரர்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்தமை அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. காணாமல்போனவர்களினுடைய குடும்பங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் நேற்றுக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா...
Loading posts...

All posts loaded

No more posts