ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரந்தன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய ரிக்ஷன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுடன் மேலும் இருவர் பயணித்தாகவும் அவர்கள் அலைபேசியில் கதைத்துக்கொண்டு சென்றமையினால்...

காதலித்து ஏமாற்றிய பெண் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை

ஆண்களை காதலித்து பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ரேனுகா இரவிச்சந்திரன் என்ற யுவதி தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி சுன்னாகம்,...
Ad Widget

யாழில் ரயிலில் மோதி இளம் யுவதி பலி

சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி 18 வயது இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். சபாபதி வீதிப் பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை...

வடக்கில் சமஷ்டியை கோரக் கூடாது என கூற எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை!

சாத்வீக போராட்டங்களை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு காணி சுவீகரிப்பு மற்றும் ஏனைய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை இயக்கதின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, கடந்த காலத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எமது எதிர்காலம் பற்றியும்...

வடக்கு மக்களின் பிரச்சினை குறித்து ஐ.நா.விடம் கோரிக்கை

வட மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம் மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் குறித்த கோரிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மேதின உரை

விஜயகுமார் அவர்களின் மேதின உரை (வீடியோ)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் அவர்களின் மேதின உரை..

செல்வராசா கஜேந்திரன் அவர்களின் மேதின உரை (வீடியோ)

யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா

யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இவ் வருடம் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மகிபால கூறினார். மேலும் வைத்திசாலைக்கான விசேட மருந்து உபகரண இயந்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன், அதி விசேட சிகிச்சைக்கான பிரிவுகள் மற்றும் விபத்துக்கான பிரிவுகளும் அமைக்கப்படும் என்று அவர்...

கொக்கிளாய் விகாரை; காணி உரிமை சர்ச்சையால் நிறுத்த முடியாத நிலை

முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் புதிய விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு காணி உரிமைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தையின் பெயரில் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதால் தனது காணியையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளை சட்டத்தின் மூலமும் நிறுத்த முடியவில்லையென காணியின் தற்போதைய...

குளிர்பானங்களை பருக வேண்டாம்!! அரச வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை!!!

நாட்டில் நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலையின் காரணமாக குளிர்பானங்களையும், அதிக சீனி கலக்கப்பட்ட பானங்களையும் பருக வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.இவ்வாறான பானங்களை பருகுவதன் ஊடாக, மீண்டும் உடலில் நீரற்ற நிலை ஏற்படும்...

யாழில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச்சசெயல்களையும் சமூக அவல நிலையையும் தடுத்து நிறுத்துவதற்கு புத்திஜீவிகளும் சமூக பெரியார்களும் முன்வரவேண்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ். ஆயர் நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.குடா நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது....

கோண்டாவில் பகுதியில் புகையிரதம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த...

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தேடுதல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள்...

சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் விசாரணை!

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகரவிடம் நேற்று புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சாவகச்சேரி வெடிபொருள் மற்றும் தற்கொலை அங்கி மீட்பு தொடர்பில் கைதான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தொடர்பில், ருவான் குணசேகர வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், புலனாய்வுப் பிரிவினர் ருவான் குணசேகரவிடம் வாக்கு...

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய சோதனைச் சாவடி நீக்கப்படவுள்ளது!

காங்கேசன்துறை வீதி – மாவிட்டபுரக் கந்தசாமிக் கோவிலுக்கருகில் உள்ள இராணுவச் சோதனைச்சாவடி அங்கிருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவுள்ளது. இதனால் மங்கள் எந்தவொரு கெடுபிடிகளும் இன்றி காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வலி வடக்கு பாதுகாப்பு வலயலத்தின் இந்தச் சோதனைச்சாவடியானது, காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி ஆகியவற்றின் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில்...

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரைக் கூறி யாழில் மோசடி!

இலங்கையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இதில் மடத்தடிப் பிரதேசவாசி ஒருவர் 36,000 ரூபா பணத்தை இழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தெரிவித்திருப்பதாவது, நேற்று முன்தினம் எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நாம் குறித்த தொலைபேசி நிலையத்திலிருந்து கதைக்கின்றோம்....

வடமாகாண சபையின் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி எங்கே?

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில், வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டபோதும் அங்கே இன்னமும் நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை. இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்படும் என கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில்...

தமிழ்மக்கள் தீர்வுத்திட்ட வரைபு ஐநாவிடம் கையளிப்பு!

இலங்கைக்கான ஐநா வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோளி தலைமையிலான குழுவுக்கும் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இருதரப்பினரும் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பலப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல்களில்...

யார் எதிர்த்தாலும் முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பேன்!

அண்மையில் சிறுவர் இராஜாங்கப் பிரிவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கடந்த அரசாங்கத்தில் நான் உட்பட 90ஆயிரம் பெண்கள் விதவையாக்கப்பட்டோம் எனவும் விதவைகளாக தகுதியற்ற இளம் பெண்கள் அந்த அரசிலே விதவைகளாக்கப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த அரசிலேயே வெள்ளை வான் கடத்தல்,...
Loading posts...

All posts loaded

No more posts