- Tuesday
- August 11th, 2026
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் கருணாநிதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு தமிழ் மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நிலையில் இருந்தும் கூட அதற்கான முயற்சிகள் எதனையும்...
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிறந்த படைப்பாளி உருவாகவேண்டும் என்றால் அவர் ஈழத்திலிருந்தே உருவாகவேண்டும் எனத் தென்னிந்திய திரைப்படநடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு படைப்புக்கு வலி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு...
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவரைத் தப்பவைக்க முயன்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் இருவரும் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் எனத் தெரியவருகின்றது. வித்தியாவின் கொலைச் சம்பவம் நடைபெற்றபோது யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகராக லலித் ஜெயசிங்க கடமையிலிருந்தார். இவர் சட்டவிரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறனின் மாணவர் எனத் தெரியவருகின்றது. சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் உறவு சிறப்பாக உள்ளதாகவும் தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்கவேண்டுமெனவும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சியொன்றை உருவாக்கப்போகின்றார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும்,...
சிறீலங்கா முழுவதும் போலியோ நோய்த் தடுப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொண்ட தினமான தேசிய நோய்த் தடுப்புத் தினமன்று, நீங்கள் ஆயுதங்களை கீழே வைக்கத் தயாரானால் நாமும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என விடுதலைப்புலிகள் கடிதம் மூலமாக அறிவித்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் தலைநகர்...
தாவடிச் சந்திப்பகுதியில் 14 பவுண் நகைகள் மற்றும் 25,000 பணம் என்பன நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிலிருந்தோர் நித்திரையிலிருந்த நேரம் பார்த்து, வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 14 பவுண் நகைகள் மற்றும் 25,000 பணம் என்பவற்றை திருடிச்சென்றுள்ளனர். மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதான வீதியின் கோப்பாய் சந்தியில் தன்னியக்க வீதிச் சமிஞ்கை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. கோப்பாய் சந்தியில் வீதி விபத்துக்களினால் கடந்த வருடம் பலர் உயிரிழந்திருந்தனர். இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலகம் குறித்த பகுதியில் வீதி சமிஞ்கையினை பொருத்தி தருமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரியிருந்தது....
திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிலைமையொன்று ஏற்படுமாயின், உடனடியாக எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள் அடங்கிய அனர்த்தப் பொதியொன்றைத் தயாராக வைத்திருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கே, இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காணி உறுதி, பணம், தங்க நகைகள், டோர்ச், அத்தியாவசியமான மருந்துகள் ஆகியன அடங்கிய பொதியையே, தயாராக...
நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) தனது இலங்கை விஜயத்தின் போது, வட மாகாணத்துக்கும் வருவார் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ம் திகதி அவர் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதோடு, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். டொரே ஹேடர்ம் எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் ஜூன்...
கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் இருந்து ஒரு தொகை வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 கிளைமோர் குண்டுகள், 65 கைக்குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் போன்றவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இராணுவத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அப் பகுதியிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...
வடக்கில் 65000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு நிபுணர் குழுவினர் அனுமதி வழங்கியுள்ளதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த வீடமைப்பு திட்டத்தில் பாதிப்பு கிடையாது என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வழமையான சீமெந்து கல் வீடுகள் மற்றும் உலோகத்திலான...
நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளது. யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து வருகின்றனா். இந்த...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க இராணுவக் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு-வெல்லம்பிட்டியவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்திகரிக்கும் பணியில் அமெரிக்க இராணுவத்தின் கடெற் தர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடெற் தர அதிகாரிகளுடன் இணைந்தே இவர்கள் இந்த சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு...
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (29) மழை பெய்யக் கூடும் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி மேல், வட மத்திய, தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் மழைக்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களைவிட எண்ணிக்கையில் குறைவாகவுள்ள முஸ்லிம்களை அடக்கி ஆளமுடியாது. அவர்களை சரிசமமாக நடத்தாவிட்டால் சரியான தீர்வை எங்களால் எட்ட முடியாது என்பதை திட்டவட்டமாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடகிழக்கு...
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார்....
கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களுகங்கை, நில்வள கங்கை மற்றும் அத்தனகளு ஓய ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுகங்கை பகுதியில் உள்ள மில்கந்த, பட்டுபவுள, நில்வள கங்கையின் பகுதியில் உள்ள பனடுகம, அத்தனகளு ஓயா பகுதியில் உள்ள துன்மலே...
ஒரு சில நாட்களுக்குமுன்னர் வடக்கு மாகாணசபையின் 53ஆவது அமர்வு நடந்துகொண்டிருந்த வேளையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் யாழிலிருந்து வெளிவரும் ஊடவியலாளர்களையும், ஊடகங்களையும் அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ். ஊடக அமையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத்தின் 4 அவது தூணான ஊடகத்துறை கடந்த 3 தசாப்தங்களில் 41 தமிழ் ஊடகவியலாளர்களை வடகிழக்குமாகாணங்களில்...
வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது. அரசாங்கம் அனைத்துப் பொருட்களுக்கும் வரி அறவிடும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே கூறினார். வாகன இறக்குமதிகளுக்காக புதிய வரி முறையை அறிமுகப்படுத்தியதன் காரணமாக வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். முச்சக்கர வண்டி...
Loading posts...
All posts loaded
No more posts
