Ad Widget

வெள்ளம் பாதித்த பகுதிகளை சுத்தம் செய்யும் அமெரிக்கப் படையினர்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க இராணுவக் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

us-cadets-3

கொழும்பு-வெல்லம்பிட்டியவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்திகரிக்கும் பணியில் அமெரிக்க இராணுவத்தின் கடெற் தர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடெற் தர அதிகாரிகளுடன் இணைந்தே இவர்கள் இந்த சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்கப் படைகள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts