தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் கருணாநிதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு தமிழ் மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நிலையில் இருந்தும் கூட அதற்கான முயற்சிகள் எதனையும் எடுக்காது வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த முக்கிய நபர்களில் கருணாநிதியும் ஒருவர்.
இப்படியான ஒருவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வாழ்த்துக்கடிதம் அனுப்பிவைத்தமையானது, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இரா.சம்பந்தன் அவர்களும் காரணமாக இருந்தார் என்பதையே குறிப்பிடுகின்றது எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.