- Wednesday
- March 4th, 2026
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் சித்திஅடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது மட்டும் போதாது. மாணவன் வாழ்க்கையிலும் நல்லதொரு மனிதனாக வெற்றிபெற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாகவும் திகழவேண்டும் என்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிசன்...
பெறுமதி சேர் வரி மாற்றத்துடன் பஸ் கட்டணத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என, கோரிக்கைகளோ அழுத்தங்களோ விடுக்கப்படவில்லை என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து சில ஊடகங்களில் வௌியான செய்திகள் தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி...
கிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்குகாகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (09) காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 22...
சீமெந்து மூட்டையொன்றின் விலையை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன. வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலேயே சீமெந்தின், விலையையும் அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(09) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 75 மில்லிமீற்றரைத்...
சூரியனின் இன்றையதினம் கரும்புள்ளி ஒன்று ஏற்படுவதை இலங்கையில் இருந்து அவதானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.42 முதல் 6.16 வரையான காலப்பகுதியில் இதனை அவதானிக்க முடியும். சூரியனை 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதன் கிரகம் தமது சுற்றுப் பாதையில் கடந்து செல்கிறது. இதன்போது இந்த அரிதான கரும்புள்ளி ஏற்படுகிறது. இதனை இலங்கை, இந்தியா,...
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியின் வீட்டுக்கருகில் வசித்த அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே சிறுதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், குறித்த சம்பவம் இருவாரங்களுக்கு முன் இடம்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பில் ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிறுமியின்...
கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட...
யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுற்றுலாப் பயணிகளின் பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய், கல்வியங்காடு, கோப்பாய், மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 9 பாரிய குற்றச் செயல்களுடன் குறித்த...
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கவலையும் விசனமும் அடைந்துள்ள சமூக நலன்விரும்பிகள் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது. யாழ்.ஆயர் ஞானப்பிரகாசம் உட்பட்ட கிறிஸ்தவ, இந்து மத குருமார், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், ஊடகத்துறையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைகள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை,...
பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நோயாளர்கள் நாளாந்தம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணசபையின் தீர்வுத்திட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம்...
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கொழும்பு 2 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்வேட் ஜுலியனை பார்வையிட வருமாறு அழைப்புவிடுத்து ஏமாற்றிய அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. இந்த முறைப்பாட்டை இன்று திங்கட்கிழமை காலை ஜுலியனின் தந்தை சட்டத்தரணியுடன் சென்று பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை...
முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவுக்கு இராணுவப் பாதுகாப்பு வேண்டுமெனக் கோரி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜெனீவாவில் உள்ள சர்வதேச பாராளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியினைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபருக்கு விடுதலைப்புலிகளிடமிருந்து தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால் அவருக்கு...
இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என ஐ.நாவின் இரண்டு உயரதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அரசின் அழைப்பை ஏற்று ஒருவார காலம் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் இரு உயரதிகாரிகள் தமது பயணத்தின் முடிவில் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான வல்லுநர்கள் மொனிக்கா...
பகிடிவதை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பிலான புதிய பிரகடனம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் ஆகியன இணைந்து இந்த பிரகடனத்தை தயாரித்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தில் இந்த பிரகடனம் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுனந்த மத்தும பண்டார இன்று இடம்பெற்ற...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிவிருத்திக்கு உதவ புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் முன்வரவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அழைப்புவிடுத்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளநிலையில் புலம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் இப்பகுதிகளில் முதலீடு...
வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும், அதனை விடுவிப்பது தொடர்பானதுமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தற்போது படையினரிடம் உள்ள மொத்தக் காணிகளின் விவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதில் படையினரின் முகாம் மற்றும் பிறபாவனையில் உள்ள நில விபரங்கள், பயன்பாடுகள் இன்றி பாதுகாப்பின்...
Loading posts...
All posts loaded
No more posts
