- Tuesday
- August 11th, 2026
யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை அமைச்சர் விஜயகலாவுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரனுக்கும் இடையில் கருத்து மோதல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிரதேசசெயலாளர் ஒருவரை மாற்றியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்குநான் சமுகமளிக்க விரும்பவில்லை. ஏனெனில்...
யாழில் 36 வயதான சட்டத்தரணியின் மனைவியுடன் ஏற்பட்ட காதல் போதையில் 26 வயதான இளைஞன் ஒருவன் சிறைக்குச் சென்றதுடன் தனது 40 இலட்சம் ரூபாவையும் இழந்துள்ளார். இரத்மலானைப் பகுதியில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவருடைய 36 வயதான மனைவியுடன் புடவைக்கடையில் வேலை செய்யும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவன் அந்தரங்கத் தொடர்பைப் பேணி...
அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பயங்கரவாத தடைச்...
முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் முச்சக்கரவண்டியினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே அதற்குப் பதிலாக சிறிய ரக கார்களை இறக்குமதி...
இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச்...
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் இங்கு வைத்து வழங்கும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டினார். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு அவர்...
வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள 400 ஏக்கர் காணிகள் இன்னும் சில வாரங்களில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன...
மாகாண சபையைப் புறக்கணித்து மக்கள் சார்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியல் மட்டத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை நிர்வாக மட்டத்தில் எடுப்பது மக்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். உதாரணமாக அரசாங்க அலுவலர்கள் இராணுவத்திற்குப் பயந்து மக்களின்...
காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் கட்டப்பட்டுள்ள மாளிகையினை வடமாகாண சபையின் பாவனைக்கு வழங்க ஏற்பாடு செய்யுமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். யாழ்.மாவட்ட இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது, வடமாகாண சபையின்...
எதிர்வரும் நாட்களில் புதிதாக 23,000 பேர் ஆசியரிய சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த நியமனம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட போட்டிப்பரீட்சையொன்று வைக்கப்பட்டுத் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பழை (வலிகாமம் வடக்கு) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று திங்கட்கிழமை (30), நடைபெற்றது. இதன்போது, உரும்பிராயில் தற்காலிகமாக இயங்கிவரும் பாடசாலையொன்றை, சொந்த இடத்தில் இயங்கவைப்பது தொடர்பில் பாலச்சந்திரன் கஜதீபன், ஆரியகுட்டி பரஞ்சோதி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா...
குழந்தை பிறந்து 31ஆம் நாள் நிகழ்வில் அதிக மதுபானம் அருந்திய தந்தை உயிரிழந்த சம்பவம் சங்கானை, ஆஸ்பத்திரி வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அரியேந்திரன் அஜந்தன் (வயது 36) என்பவரே அதிகம் மதுவருந்தி உயிரிழந்துள்ளார். உறவினர்களுடன் சேர்ந்து அதிக மதுபானம் அருந்திய நிலையில் ஞாயிற்றுக்கிழமை...
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா கடத்தலுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் குற்றச்சாட்டியுள்ளார். வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
வட் வரி அதிகரிப்பை அடுத்து, முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்தது. இந்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில், முச்சக்கரவண்டி இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று இடம்பெற்றதாக மேற்படி சங்கத்தின் தலைவர் ஜீ.சுதில்...
வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை...
தமக்கான நியமனத்தினை வழங்க வேண்டும், அடிப்படை உரிமைகள் பெற்றுத்தரப்பட வேண்டும் என்று கோரி, யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் இன்று கவனீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் 125 பேர் கலந்துகொண்டனர். பின்னர் அவ்விடத்துக்கு வந்த வடமாகாண...
எமக்கு கிடைத்த தகவல்களின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என, முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பிரபாகரனின்...
2017ம் ஆண்டுக்காக அரசாங்க பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்காக மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்பங்களையும் மேலதிகத் தகவல்களையும் http://www.moe.gov.lk என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்காக காலஎல்லை ஜூன் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் வாகனங்களைப் பயன்படுத்துவோரின் தொகை அதிகரித்துள்ளதால், வாகனங்களுக்கான விலையும் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் முச்சக்கர வண்டி பயன்படுத்துவோர் தொகை அதிகரித்துள்ளமை மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய, அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கலேவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அமைச்சர் ஜோன்...
நாட்டின் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்கவேண்டிய தேவையெழுந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கடமையாற்றிய மற்றும் கடமையாற்றிக்கொண்டிருக்கும் நூற்றிற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகளை கடந்த வாரம் அலரி மாளிகையில் சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கையளிக்கப்படவுள்ள காணிகளின் திட்டவரைபுகள் படையினரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
