Ad Widget

யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் போராட்டம்

தமக்கான நியமனத்தினை வழங்க வேண்டும், அடிப்படை உரிமைகள் பெற்றுத்தரப்பட வேண்டும் என்று கோரி, யாழ் சுகாதார மருத்துவ தொண்டர்கள் இன்று கவனீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

530489954Untitled-8

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் சுமார் 125 பேர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவ்விடத்துக்கு வந்த வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனால் இரண்டு கிழமைக்குள் இதற்கு பதில் தரப்படும் எனவும், இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts