- Tuesday
- August 11th, 2026
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்றது. இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பில், நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பாக, இந்த கூட்டத்தின் போது...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணிகளை இழந்த 9 ஆயிரத்து 700 பேர் தொடர்ச்சியாக முகாம்களில் தங்கியிருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, 6 ஆயிரத்து 581 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் பொதுமக்களின் 9 ஆயிரத்து 205 குடும்பங்களின் 6...
இந்தியாவின் விசாகா பட்டிணத்தை சாத்தியமான இலக்காக குறிவைத்திருக்கும் தீவிரவாதிகள், கடல்வழித் தாக்குதலை நடத்துவதற்கு இலங்கையை பயன்படுத்த முயற்சிக்கும் தகவல்களை இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இந்திய புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி வன் இந்தியா (oneindia) என்ற இணையத்தளம் இன்று வியாழக்கிழமை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. ராடர் தீவிரவாதிகள் என்று அறியப்படுகின்ற ஆயுதக் குழுவினர் ஆந்திர பிரதேஷ் மற்றும்...
தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் தூய கடற்கரை என்னும் தொனிப்பொருளில் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் இன்று யாழ் மாவட்ட செயலக ஏற்பாட்டில் யாழ் பண்ணை கடற்கரை பகுதியில் நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...
ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்தின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் ஆகிய ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 870 ரூபாவாகவுள்ள சீமெந்துப் பக்கற் 930 ரூபாவாக உயர்வடைகின்றது.
சிவனொளிபாத யாத்திரை காலமானது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதை அடுத்து அங்கு சுற்றுப்புற சூழலை குழு ஒன்று சுத்தப்படுத்தியுள்ளது. கடந்த 27 மற்றும் 28ஆம் திகதி சிவனொளிபாதமலையை அண்மித்த பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என்பன குறித்த குழுவால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த குழு 'ஒன்றிணைவோம் உதவி செய்வோம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த...
விடுதலைப் புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பகிரதி முருகேசு உட்பட 8 பேர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 39 பேரது வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நேற்று நடைபெற்றது. பிரான்ஸிலிருந்து தனது...
ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நேற்று காலை யாழ் நூல் நிலையத்தில் நினைவு நாள் நிகழ்வொன்றும் அனுஸ்டிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்ற இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத மிகவும்...
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அம்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்ட தனியார் விடுதியொன்றைத் திறந்துவைக்கும் விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீ பரவியுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. ஐந்து நட்சத்திர விடுதி திறப்பு விழாவானது புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாவை வெட்டித் திறந்துவைத்தபின்னர் நிகழ்வுகள்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார், நீதவானிடம் நேற்று புதன்கிழமை (01) தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களுக்கும் எதிரான வழக்கு, ஊர்காவற்துறை...
தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளது. எனவே, எதிர்ப்பினை சமாளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பார்ப்போம்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாம் இருவரும் சந்திப்பதற்கு பலர் எதிர்ப்புத்...
முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலையில், நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வழிசமைத்துக்கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாகனம் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன. நான்கு சக்கர வண்டி என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்த போதிலும், அது எவ்வகையான வாகனம் என்று அறிவித்திருக்கவில்லை. இருப்பினும், மிகச் சிறியரக கார் ஒன்று தொடர்பிலேயே அமைச்சர் அறிவித்திருந்தார்...
"இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் சமஷ்டியே பொருத்தமானது'' என்று நோர்வே தூதுக்குழுவினரிடம் தமது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை வடக்குக்குச் சென்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்துக்...
"நீண்ட கால இடப்பெயர்வின் பின்னர் சொந்த இடங்களில் மீளக்குடியமரும் போது, நீங்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்கின்றீர்கள். இதனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்." இவ்வாறு நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை வந்த அவர், மக்கள் மீள்குடியமர்வுக்கு கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட வளலாய்க்குச் சென்றார். அங்கு மீளக்குடியமர்ந்த மக்களுக்கு...
போரினால் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக தெற்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைக்கும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்த...
கடந்த காலத்தில் நாட்டில் இருந்த முரண்பாடுகள் மற்றும் அரசியல் காணரங்களால் புலம்பெயர்ந்துள்ள இலங்கை பிரஜைகளுக்கு இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இத்தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை இன்று புதன்கிழமை காலை பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வாக்காளர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து...
பலாலி வடக்கில் மீளக்குடியமர பதிவு செய்து காணி இல்லாத 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணி பிரிவு ஊடாக தலா 2 பரப்பு காணி நன்கொடையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு, கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது....
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவர் இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்ததுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....
வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி மரம் ஒன்றுடன் மோதியுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பஸ் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தானது சாரதியின் கவனக்குறைவினாலும்...
Loading posts...
All posts loaded
No more posts
