- Wednesday
- March 4th, 2026
'வடமாகாணத்தில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன், கடந்த ஜனவரி மாதம் இராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்தக் குழுவின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன' என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண...
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 2015ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கில் 15 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மீளக்குடியேறியுள்ளனர். பலாலி வடக்கு அன்டனிபுரம் பகுதி, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 165 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்....
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படும், 12 இலங்கையர்கள், கொழும்புக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. தற்போது இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் வௌிநாட்டு...
ஊடகங்கள் சில எனது மனைவிக்கும் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிக்கும் தொடர்பு என செய்திகள் வெளியிட்டு இருந்தன. இதனால் மனைவி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவர் நீதவானிடம் முறையிட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றய...
யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார். யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறு...
வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. பனாமா ஆவணங்களின் மற்றொரு தொகுதி நேற்று வெளியானது. இதில் சிறிலங்காவைச் சேர்ந்த, நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்...
சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ்.மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ். மேல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் இருந்த அரச தலைவர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாரிய நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக கோட்டாபய ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை முன்னிலையாகினார். இதன்பின்னர்...
ஸ்ரீலங்காவின் வட பகுதி அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்த கனேடிய அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது. வட பகுதியில் கனடாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை, கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கான ஸ்ரீலங்கா பிரதிநிதி பீற்றர் பச்சுலர் ஆகியோர் பார்வையிடவுள்ளனர். பாற்பண்ணை மற்றும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு...
புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக நேற்று நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மாணவியின்...
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர். இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின்...
கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு மன்னாரில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து, அவர்களுக்கு குடியேற காணியும் வழங்கி, குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கமும் அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவ...
இலங்கையில் தினமும் 658 கரு கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க அவர்களே இதனை தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா என்ற தலைப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஆண்டு தோறும்...
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில், வடமாகாணத்தில் கலப்புப் பாடசாலைகளை உருவாக்கவேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அவர், ஒன்றிணைந்த கட்டளைத் தலைமையகத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் விஸ்வமடு பயிற்சி முகாமை, நேற்றுத் திங்கட்கிழமை பார்வையிட்டார். அதன் பின்னர், அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
வீட்டுத்தோட்டத்தின் ஊடாக வீட்டுக்குள் நுழையும் கள்வர்களைபு; பிடிப்பதற்காக, சட்டவிரோதமான முறையில் போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு, 15 வயதான மாணவனொருவன் பலியான சம்பவம், வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, செலினிகம 2ஆவது ஒழுங்கையிலேயே இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், 9ஆம் தரத்தில் பயிலும் அமில சந்தருவன் குமார (வயது 15) பலியாகியுள்ளான். இவர்,...
பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டத்தை மீற எவருக்கும் இடமில்லை எனவும், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அல்ல ஒன்றிரண்டில் பகிடிவதை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. உலகில் எங்கும் இதுபோன்ற பகிடிவதைகள்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர், எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (09) ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 9 சந்தேகநபர்களும்...
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கொழும்பு 2 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்வேட் ஜுலியனை அவரது தந்தை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டுள்ளார். அத்துடன், குற்றப்புலனாய்வு பிரிவினரின் பாதுகாப்பில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜுலியனின் மனைவியை பார்வையிட அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என ஜுலியனின் தந்தை செய்தி ஊடகம் ஒன்றிற்க்கு தெரிவித்துள்ளார். கடந்த...
வற் வரி திருத்தத்தால் அதிகரிக்கப்பட்ட இந் நாட்டு தொலைபேசி கட்டணத்தால் மக்களுக்கு பாரிய சுமை ஏற்படாது என தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். வற் வரி உயர்வு நியாயப்படுத்த முடியாது எனினும் நிலவும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகத்தில் குறைந்த...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றுது. இதன்போது வடமாகாணத்துக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணித் தெரிவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இதன்போது, வடக்கில் அமைக்கப்படவுள்ள பொருளாதார...
Loading posts...
All posts loaded
No more posts
