Ad Widget

பேஸ்புக்கினால் இலங்கையில் நடக்கும் நல்ல காரியம்

சிவனொளிபாத யாத்திரை காலமானது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதை அடுத்து அங்கு சுற்றுப்புற சூழலை குழு ஒன்று சுத்தப்படுத்தியுள்ளது.

கடந்த 27 மற்றும் 28ஆம் திகதி சிவனொளிபாதமலையை அண்மித்த பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என்பன குறித்த குழுவால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த குழு ‘ஒன்றிணைவோம் உதவி செய்வோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த சுத்தப்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு முற்று முழுதாக பேஸ்புக் நட்பு வட்டாரங்களால் உருவாக்கப்பட்ட தனியார் அமைப்பு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான பொதுப்பணிகளில் தாம் ஈடுபடுவது எவ்வித இலாபத்துக்கோ, புகழுக்கோ அன்றி பேஸ்புக் வலைத்தளத்தினால் சமூகத்திற்கு பல நல்ல காரியங்களையும் செய்யமுடியும் என்பதை உணர்த்துவதற்காகவே என்று அந்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts