Ad Widget

வாகனங்களின் விலை அதிகரித்தது ஏன்? அமைச்சர் பதில்

நாட்டில் வாகனங்களைப் பயன்படுத்துவோரின் தொகை அதிகரித்துள்ளதால், வாகனங்களுக்கான விலையும் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் முச்சக்கர வண்டி பயன்படுத்துவோர் தொகை அதிகரித்துள்ளமை மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய, அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கலேவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அமைச்சர் ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாகனங்களின் புதிய விலை குறித்து வர்த்தமானி அறிவித்தல் வரும் வரை கூறமுடியாது எனவும், அவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

Related Posts