- Wednesday
- March 4th, 2026
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடையத் தொடங்கியுள்ளது. மாதிரி வீடு அமைக்கப்பட்டது முதலே இந்த முறுகல்நிலை இருந்து வருகின்றது. குறித்த வீடமைப்புத் திட்டத்துக்கு முட்டுக்கட்டைகள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர்...
தமிழர் விடுதலை இயக்கத்தின் (telo) முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 30 வது ஆண்டு நினைவஞ்சலி எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தமிழர் விடுதலை இயக்கத்தின் உப தலைவர் ஹென்றி மகேந்திரன் அறிவித்துள்ளார். யாழ். நகரப் பகுதியில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்தே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்....
களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களால் தான் பலமுறை பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக, மாணவி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, இன்று காலை காலமானார். தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கட்டடம் ஒன்றின் நிர்மாண பணியின் போதே இவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. 2010ம்...
1983ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் யுத்தப் பாதிப்புகள் காரணமாக காலங்காலமாக இலங்கையிலிருந்து சுமார் 3,04,269 பேர் அகதிகளாக இந்திய, தமிழ்நாட்டுக்குச் சென்றதாகவும், இதில் சுமார் 2,04,269 பேர் இதுவரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை திரும்பியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இன்னும் முகாம்களில் - முகாம் பதிவில் சுமார்...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது உத்தியோகபூர்வமாக நோர்வே அரசிடம் கையளிக்கப்பட்டது. பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் மாலை 02.00 மணியளவில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசர் (Thorbjørn Gaustadsæther) இடம் நேரடியாகக் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும்...
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபாரிகளுக்கான நீர் விநியோகம் சீராக இடம்பெறாமை, மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை , சந்தையிலுள்ள மலசலகூடங்கள் சுத்தமற்றுக் காணப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி வியாபாரிகள் தமது இட வாடகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04-05-2016) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்....
தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்காக முள்ளிவாய்க்காலிலும், வாகரையிலும் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் அனைத்து மக்களையும் பங்குகொள்ளுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அழைப்புச் செய்தியில்.. தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 07ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள்...
நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத இருவர், இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூர சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக இந்த இனந்தெரியாத நபர்கள் இரவு 9.20 மணியளவில் வீட்டின் முன் கதவினை கோடரியால் வெட்டியுள்ளனர். எனினும் வீட்டின் உள்ளே நுழைய முடியாத இனந்தெரியாத நபர்கள், வீட்டை உடைக்கும்...
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி நடக்கிறது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த...
வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலில் 40 விழுக்காடு பால் வடக்கைவிட்டு தனியார் நிறுவனங்களால் வெளியே எடுத்துச்செல்லப்படுவதாக கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (04.05.2016) கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது...
பிரசன்ன ரணவீர மற்றும் பாலித்த தேவரப்பெரும ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கூடிய சபையில் சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, நாளை முதல் ஒரு வார காலத்துக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் குறித்த இருவரும் ஈடுபட முடியாது. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே இந்த...
வெசாக் பௌர்ணமி தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருவதன் காரணமாக அடுத்த நாள் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச பொது விடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில்...
தமிழீழ வைப்பகத்தின் தங்க நகைகளை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தங்க நகைகளை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கேப்பாப்புலவு லூர்த்துமாதா வீதியில் உள்ள தமிழீழ வைப்பகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்தத் தலைமைச் செயலகத்துக்கு முன்னால் உள்ள காணியின் கிணற்றுக்குள் தங்க நகைகளைப் போட்டு...
கைதுசெய்யப்படும் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்களா என்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன என...
வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகளுக்கு, இனவாதசாயம் பூசாது, அவற்றை அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்தார். அரசியல் ரீதியாக ஒரு தீர்வைக் காணமுடியாத நிலையே, நாட்டில் தற்பொழுது காணப்படுகிறது. நிலைத்திருக்கக் கூடிய...
பணிஸ் மற்றும் மாலுப்பாணின் விலைகள், ஐந்து ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பினால் பாண் தவிர்ந்த ஏனைய, தின்பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பாலும் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையாலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மாஜரின் மற்றும்...
இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கிருந்த ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் அங்கு, விடியும்வரை தங்கிருந்தார்' என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (04), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது எஸ்.எம்.மரிக்கார் எம்.பி கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு...
யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் யாழ்.மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி...
Loading posts...
All posts loaded
No more posts
