- Wednesday
- March 4th, 2026
"புனர்வாழ்களிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது. எனவே, கைதுக்கான காரணத்தை அரசு உடனடியாகத் தெளிவுப்படுத்த வேண்டும்." இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதியளிப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியும் குழுக்களின்...
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றபோதிலும் அதை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்போம் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் நிலைவரம் தொடர்பில் டக்ளஸ் தேவாந்தன்...
ஐக்கிய அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இது குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு...
எரிந்துகொண்டிருந்த அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியபோது, தீக்காயங்களுக்குள்ளாகிய பெண்ணொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அபூபக்கர் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் தயாபதி (வயது 40) என்பவரே தீக்காயங்களுக்குள்ளானார். எரிந்து கொண்டிருந்த அடுப்புக்கு மேலதிகமாக மண்ணெண்ணெய்யை ஊற்றியதில் உடலில் தீ பற்றியதால் தீக்காயங்களுக்குள்ளாகிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி, இன்று புதன்கிழமை அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரபா கணேஷன், ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
வெடிக்க வைக்கக் கூடிய நிலையில் இருந்த 7 டைனமேட் வெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர். யாழ். குருநகர் இறங்குதுறைமுகப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை கடற்படையினரால் இவை மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டதாக கூறினார்கள். இறங்குதுறை பகுதியில் மீன்பிடி படகு ஒன்றின் கீழ், பொலித்தீனால் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் குறித்த 7 டைனமேட் வெடிகளும்...
உலகில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் அடிப்படையில் பல மாற்றும் மிக விரைவான ஏற்பட்டு வருகின்றது. இவற்றுள்ள அதிகமானோர் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மிகவும் பிழையான முறையில் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒன்லைன் மூலம் அதிகமான மோசடிகள் இடம்பெற்று வருவதை நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையில் இப்போதெல்லாம் கையடக்கத் தொலைபேசியூடாக அழைப்பு மற்றும் குறுந்தகவல்...
மாலபே மருத்துவக் கல்லூரியினை முற்று முழுதாக அரச மயப்படுத்த வேண்டுமென வடபிராந்திய அரச வைத்தியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி முகாமைத்துவ கல்லூரி என்ற பெயரில் தான் ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவ கல்லூரிக்கான அனுமதியினை இலங்கை...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று செவ்வாய்கிழமை நோர்வே அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசரிடம் இதனை கையளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் நோர்வே தூதுவர் அடங்கிய குழுவிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது....
இராணுவத்தினரிடமிருந்து வடக்கு மக்கள் என்ன தேவைகளை பெற வேண்டுமோ அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் மற்றும் கல்விச்செயற்பாட்டில் இராணுவம் தலையிடக் கூடாது...
சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு சிவகரன் உதவி செய்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே சிவகரன் கைது செய்யப்பட்டார் எனவும் சிறீலங்காவின் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தச் செய்தி வெளியானதும் ஊடகப்பிரிவை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக புதிய...
கிளிநொச்சி உதயநகரில் 30வீட்டுத்திட்டத்தில் வசித்துவந்த 31 வயது இளைஞன் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார். சிவலிங்கம் சிவச்செல்வன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். இவருக்கு கடந்த யுத்தத்தின்போது மனநோய் ஏற்பட்டதாகவும், பின்னர் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துவந்ததாகவும் தெரியவருகின்றது. இந்நிலையிலேயே இவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என மரணவிசாரணையின்போது தெரியவந்துள்ளது என இவரது மரணவிசாரணையை விசாரணைசெய்த...
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவேண்டுமென வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாக நீதிமன்ற நீதவன் ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளை பகல் 12.30 மணியுடன் மூடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை கட்டடங்களுக்குள் இருந்து மாணவர்களால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியிலுள்ள பாடசாலைகள், இந்த வெப்பத்தால்...
யாழ்ப்பாணத்தில் 1 பவுண் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சுமார் 4,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் (8 கிராம்) தங்கள் 45,900 ரூபாய் தொடக்கம் 47,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் விலையானது சடுதியாக அதிகரித்து, 50 ஆயிரம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுப்படுத்த அல்லது அங்கத்துவக் கட்சியை ஒதுக்குவதற்கு தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முயற்சிகளுக்கு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அதற்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் 1ஆம் திகதி...
வடபகுதிக் கடலில் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன்பிடிப்பதைத் தடுப்பது தொடர்பான தனிநபர் சட்டமூலத்தை, திருத்தங்களுடன் முன்னெடுப்பதற்கு மாகாண சபைகள் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்த தனிநபர் சட்டமூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் 2016 பெப்ரவரி 10ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் பிரேரணை...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும், ஏனைய மாகாணங்கள் ஏழையும் இணைத்து சிங்கள மொழியை அடிப்படையாகக் கொண்ட வேறு பிராந்தியமாகவும் நிர்வகிக்கவேண்டும் என்று வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, மேல் மாகாண சபை ஏகமனதாக நிராகரித்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஒன்றிணைந்து,...
சிலர் காயம்: ஒருவர் வைத்தியசாலையில் 1 1/2 மணிநேரம் அவை ஒத்திவைப்பு ஜே.வி.பி, கூட்டமைப்பு எம்.பி.க்கள் குசும்பு மக்கள் கலரியிலிருந்தோர் வெளியேற்றம் விசாரிப்பதற்கு விசேட குழு நியமனம் அரசாங்கத் தரப்பினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதில், சபையே பெரும் அல்லோலகல்லோலப்பட்டது. இரு தரப்பைச் சேர்ந்த பின்வரிசை...
"தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சமஷ்டி தொடர்பில் தென்பகுதி மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். இதன் மூலமாகவே தென்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க முடியும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்திய கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
