Ad Widget

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி ஜூன் 2 முதல் சொந்த இடத்தில் இயங்கும்

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன.

இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இரு பாடசாலைகளையும் விடுவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் இடம்பெற்று இரு பாடசாலைகளையும் சொந்த இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts