தகவல் அறியும் சட்டமூலத்திற்கு 2/3 பெரும்பான்மை அவசியம்

தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலத்தின் ஐந்து வசனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக காணப்படுவதால் அதனை திருத்தங்களின்றி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை தொடர்பான மனுக்கள் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள தீர்மானத்திலேயே உயர்...

12 மணிக்கு பாடசாலை மூடுவதை இரத்துச் செய்யுமாறு அரசு அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் அதிக உஷ்ண நிலையைக் காரணங்காட்டி வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளை நண்பகல் 12.00 மணிக்கு மூடும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சும்,சுகாதார அமைச்சும் வலியுறுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் வெப்ப காலநிலையில் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை...
Ad Widget

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஸ்தூபி அமைக்கப்படும்

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும்...

நடேஷ்வரா கல்லூரிக்கு செல்வதற்கு இராணுவம் இன்னும் தடையாகவுள்ளது!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வலி வடக்கு நடேஷ்வரா இந்துக் கல்லூரிக்குச் செல்ல இன்னும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் அதிபருடன் வாருங்கள் என இராணுவத்தினர் கோருவதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மே...

யாழில் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் மக்கள்!

தினமும் மாலை ஆறு மணிக்கு பின்னர் என்ன நடக்குமோ- ? யார் வந்து வெட்டுவார்களோ? என்ற அச்சத்தில் வாழ்வதைவிட இந்த ஊரை விட்டு வெளியேறுவதே சரியான முடிவாகும் என யாழ். வாசி ஒருவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார். இதேவேளை, வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்...

ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்!

இந்த ஆண்டின் இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எல்லை நிர்ணய சபையின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிறுவப்பட்ட குழு,...

‘வற்’ வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட பொருட்கள்

அரிசி, மா, பால் மா உட்பட பல பொருட்கள் மற்றும் சேவைகள் ‘வற்’ வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. அதன் முழு விபரம் வருமாறு

கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வு

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த மூவரும், முறையாக புனர்வாழ்வு பெறாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த...

“சுண்ணாகம் நிலத்தடி நீரில்எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது” அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று(02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்

கீரிமலை பகுதியில் திங்கட்கிழமை (02) மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்லிப்பளையைச் சேர்ந்த கதிரவேலு கமலநாதன் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தார். காங்கேசன்துறை பெண்கள் படையணியின் வாகனம் மோதியதிலேயே முதியவர் படுகாயமடைந்துள்ளார். சாரதியை கைது செய்துள்ள பொலிஸார்...

புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் கொழும்புக்கு மாற்றம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் (வயது 46), மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தங்களது வீட்டுக்கு நேற்றுக் காலை 6.30க்கு வந்த, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவனைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக, அவரது...

‘பிரபாவின் ஆவி கிளம்புகையில் பாதுகாப்பைப் பிடுங்குவதா?’

பிரபாகரனின் ஆவி கிளம்பியுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த விசேட இராணுவப் பாதுகாப்பை விலக்குவது எந்தவகையில் நியாயமானது?' என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்குக்கு சமஷ்டியைப் பெற்றுத் தருமாறு கேட்கின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ் அரசுக்...

கூட்டமைப்புக்குள் முரண்பாடு வலுக்கிறதா?

இலங்கையில் பெருமபான்மையான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது. கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இதர கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைபை பலவீனப்படுத்துகிறது என, அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈ பி ஆர் எல் ஃப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி இறக்கும் தனியார் பஸ் தீக்கிரை

பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம், இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ், தீப்பிடித்து எரிவதை அவதானித்த சாரதி மற்றும் அவரது குடும்பத்தார், நீர் ஊற்றி அணைக்க முயன்ற போதிலும், அது பயணிக்காத நிலையில், குறித்த பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீக்கிரையான பஸ்ஸின் உரிமையாளர் கண்டியைச்...

இரண்டு தேசங்கள் ஒருநாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடாத்திய பாட்டாளி வர்க்க மக்களின் மே தினம் 2016 எழுச்சி நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமையுள்ள தமிழ் தேசத்தின் அங்கீகாரம் என்பவற்றை வலியுறுத்தி கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் ஈகைச்சுடரினை...

பொலிசாருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

முப்பது வருட கால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ் குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது.யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள் அனைவரையும் கண்காணித்து, கைது செய்து நீதிமன்றங்களில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ் குடாநாட்டின்...

கொக்கிளாய் விகாரையை அகற்றுமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு முதலமைச்சர் கடிதம்!

கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். கொக்கிளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு வருகின்றது. குறித்த நிர்மாணம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுனர்...

தற்கொலை அங்கியுடன் தொடர்புடையவர் இந்தியாவுக்கு தப்பிவிட்டாராம்!

சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம் என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்ட சிவகரன் இந்தச் சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். சில...

வட மாகாண நீர்விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடமாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானது. வடமாகாணத்தின் நீர்வழங்கல்...

நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு வேண்டும்

நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு கிட்டப்படவேண்டும். அதன்மூலம் மக்கள் அந்த அங்கிகாரத்தை பயன்படுத்தும் நிலை இருக்கவேண்டும். இந்த பொறுப்பை அரசாங்கம் ஐ.நாவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கும் தொழிலாளர்கள் இன்று கூறுகின்ற குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இவ்வாறானதொரு தீர்வு எட்டப்படும்போது பல குறைகள் தீர்க்கப்படும்' என்று எதிர்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...
Loading posts...

All posts loaded

No more posts