வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார். யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரு சந்தேக...

கடமை நேரத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு ஆப்பு

தமது கடமை நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், அரச ஊழியர்கள் தங்கள் கடமை நேரத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கூடுதல் நேரத்தைச் செலவிடுவது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். அண்மையில் தொழிற்சங்கம் ஒன்று...
Ad Widget

தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலம் ஆரம்பம்; வளிமண்டலவியல் திணைக்களம்

ரோணு சூறாவளியின் தாக்கம் குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது,...

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை வெளியீட்டு நிகழ்வு

தென்னிந்திய கலைஞர்கள் பாடிய யாழ்ப்பாணத்தின் இணுவிலில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் திருவருளை எடுத்துரைக்கும் ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை - 2 இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா தொடங்கும் நாளான எதிர்வரும் சனிக்கிழமை (28.05.2016) இரவு 7:00 மணிக்கு ஆலயத்தின்...

சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!

கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றது. நேற்றையதினம் அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியது. ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக காணப்படும் முல்லைத்தீவு வற்றாப்பளை...

யாழ்ப்பாணத்தைச் சுதந்திர பிரதேசமாக மாற்றிய பின்பே யாழ்பாணத்தை விட்டு செல்வேன்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் உரையாற்றும் போது எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு யாழ்ப்பாணத்தை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சமூகத்தில் ஒவ்வொருவருக்கும்...

செனல் 4 காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை!

செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட யுத்தக்குற்ற காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நான்கு காணொளிகளை வெளியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட இக்காணொளிகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை கடும் இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. எனினும்...

நாளாந்தம் 28 படிகள் ஏறி இறங்கும் சம்பந்தர் ஐயா!!

எதிர்க்கட்சித் தலைவருக்கு பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் காணப்படுகின்றன.எனினும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லம் பொருத்தமானதல்ல.தற்போது சம்பந்தனுக்கு அடுக்கு மாடி வீடு ஒன்றின் மேல்மாடியே வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடி வீட்டின் படுக்கை அறை மேல்...

நாம் குற்றவாளிகள் அல்லர்; உண்மை ஒரு நாள் வெல்லும்!

"நாங்கள் குற்றவாளிகள் அல்லர். உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்."- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். தெஹிவளை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாமல் எம்.பி., பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி.)...

யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்!

பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர். எஸ்.அற்புதராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விழிப்புலனற்றோரால் முடியாதது என...

மேலும் 3 அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வசம்

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன. இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் நேற்று பொறுப்பேற்றுள்ளார். குறித்த...

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில்

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜூடின் மரணித்த காலப் பகுதியில் கொழும்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு மே 17ம் திகதி இடம்பெற்ற தாஜூடினின்...

வடமாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றம்

வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் இன்று அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. வடமாகாண அமைச்சர்களுக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சில பொறுப்புக்களை முதலமைச்சர் எடுத்து தனக்கு கீழேயும், சில பொறுப்புக்களை வேறு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6.00...

உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லை

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையென மறுதலித்துள்ளார் வடமாகாண ஆளுநர். இதற்கு ஆதாரமாக உரையின் இறுவெட்டினையும் வட மாகாண சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. வட மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பிற்கான யோசணையில் சமஸ்டி முறையிலான தீர்வை முன்வைத்து அது பிரேரணையாகவும் ஏற்றுக் கொள்ளப்ப...

வயோதிபப் பெண் கழுத்து வெட்டிக் கொலை

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீடொன்றில் இருந்த வயோதிப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். இந்த வயோதிப் பெண்ணும் அவரது கணவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினம் வயோதிப்பெண், உணவை...

சிறுவனும் இளைஞனும் வாள்களுடன் கைது

கந்தரோடைப் பகுதியில் வாள்களுடன் 17 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குழு மோதல் ஒன்றுக்கு தாயாராகவிருந்த போது, இவர்களைப் பொலிஸார் கைதுசெய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

சுன்னாகத்தில் ரயில் மோதி வயோதிபர் பலி

சுன்னாகம் பிரதேசத்தில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில்வே கடவையைக் கடக்க முயன்ற போதே வயோதிபர் மீது ரயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் ஆலடி பகுதியைச் சேர்ந்த சின்னராசா என்ற முதியவரே புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை: இதுவரை 92 பேர் பலி

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் வரைக்கும் 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், 109க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் 71 ஆயிரத்து 97 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 933 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு...

வெள்ளம் பாதிப்பு; யாழ். மாவட்ட செயலகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை யாழ். மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, நன்கொடைகளை வழங்க முன்வரும்...
Loading posts...

All posts loaded

No more posts