- Wednesday
- March 4th, 2026
மருதனார்மடம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணைக்குள் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை புகுந்த 5 பேர் கொண்ட குழு, அங்கு கள் அருந்திக்கொண்டிருந்த இளைஞனை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இணுவில் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
யாழ்பாணத்திலுள்ள மணிக்கூட்டு கோபுரம், கடந்த பல வருடங்களாக கவனிப்பார் அற்று இருக்கும் நிலையில், மாலை 4 மணி, 7 மணியாக அடையாளப்படுத்தப்படுவதுடன் அனைத்து நேரங்களுக்குமான ஒலிகள் மாறுபட்டே எழுப்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் அடையாள சின்னங்களில் இம் மணிக்கூட்டு கோபுரமும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அடையாளச் சின்னங்களை பாதுகாக்க வேண்டி அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக...
மல்லாவி, கோட்டை கட்டிய குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்த திருடர்கள், 12 பவுண் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மல்லாவிப் பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை வேளை, வீட்டுக்கதவைத் திருடர்கள் தட்டியபோது, வீட்டிலிருந்தோர் கதவைத்...
சுதுமலை, அம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், உடுவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் நாகையா செந்தூர்செல்வன் (வயது 44) எனப் பொலிஸார் கூறினர். நீர் இறைக்கும் இயந்திரத்தின் ஆழியினை போடும் போது திடீரென ஏற்பட்ட மின்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் (வயது 46) இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனது வீட்டுக்கு இன்றையதினம் காலை 6.30 மணிக்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திங்கட்கிழமை (02) முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பெறுமதி சேர்த்துக்கொள்ளப்பட்ட வரிக்கமைய நூற்றுக்கு 11 வீதமான வரியானது 15 வீதமாக இன்று முதல் அதிகரிக்கும் என்று தேசிய வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது. நிதியமைச்சின் முன்மொழிவுக்கமைய இவ் வற் வரி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 11 வீதமாக இருந்த வரியானது இன்று நள்ளிரவுக்கு முதல் மாற்றப்படாவிட்டால் நாளை(03) தொடக்கம் மாற்றமடையும். எவ்வாறிருப்பினும் இதுவரை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர்கள் தினம் நேற்று யாழ் இணுவில் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து பேரணி ஆரம்பமானது. இந்த பேரணி யாழ் மருதனார் மடம் சென்று, அங்கிருந்து யாழ் இராமநாதன் கல்லூரியின் மைதானத்திற்கு வந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக...
சேவையாளர்களாக நாட்டுக்கும் மக்களுக்கும் தௌிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேதின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடு தற்போது பொருளாதார ரீதியில் பின்நோக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்வாறான சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழலில் முன்னோக்கி செல்ல அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும்...
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கூட்டுறவுத்துறையின் இன்றைய சரிவுக்கு கூட்டுறவு அமைப்புகளினுள்ளே கட்சி அரசியல் புகுந்ததும் ஒரு காரணம். ஒருபோதும் கூட்டுறவு அமைப்புகள் கட்சி அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது. கட்சிகளின் தொண்டர்படையாக இயங்கக் கூடாது என்று வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதினப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2016) கிளிநொச்சி கூட்டுறவுக்...
அந்நாளில் மிக விரைவாக சரிந்து சென்று கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் பெறுமதியை மீண்டும் மேல்நோக்கி உயர்த்த வேண்டிய எமது கடப்பாடு பற்றி - அன்றைய கடினமான சூழலுக்குள் இருந்தவாறே - சுட்டிக்காட்டியிருந்தோம். பல்கலைக் கழகத்தின் மீதான உயர்கல்வி அமைச்சின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட தலையீடு பற்றியும், அதுமட்டுமன்றி அந்த அமைச்சைச் சாராத பிற அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு...
கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது என்று வர்ணிக்கும் அளவுக்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை (01.05.2016) கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த மேதினப்...
ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை உட்புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் சிலர் படுக்கையில் இருந்த ஆசிரியரை கோடாரியால் கொத்தியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். தர்மலிங்கம் நடேஸ்வரன் வயது(46) என்ற ஆசிரியரே இவ்வாறு நெஞ்சில் கோடாரி கொத்துக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில்...
தெல்லிப்பளை பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள பனங்காணியொன்றில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கால்நடைகளை மேய்க்கச் சென்ற இளைஞர் ஒருவரே, இந்தச் சடலத்தைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சடலத்துக்கு அண்மையில் சாரம், செருப்புகள் என்பனவும் சிதறி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்....
காலியில் இடம்பெற இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் 4000இற்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கிலே யாழ்ப்பாணத்திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் இந்த மக்கள் எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாமல் மேதினத்தில் கலந்துகொள்ளவுள்ளார்கள் எனவும் தெரிவித்த அவர் கிளிநொச்சியில் மாத்திரம் 1500 மக்கள் இந்நிகழ்வில்...
இலங்கையில் வேலையற்றோர் வீதம் கடந்த ஆண்டிலிருந்து அதிகரித்துவருகின்றது. அந்த வகையில் அண்மையில் வடக்கு மாகாண சபையால் கோரப்பட்ட பணிய உதவியாளர் வெற்றிடத்திற்கு 250 பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் பணியக உதவியாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக 40பேர் தேவைப்பட்டனர். இதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது இப்பதவிக்கு 9,460பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 250 பேர் பட்டதாரிகளாவர்....
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து சிங்கள இனவாதக் கட்சிகள் சில இணைந்து கொழும்பு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்தமை யாவரும் அறிந்ததே. அதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த அழைப்பாணைக்கமைய முதலாம் எதிரியாக தமிழரசுக்...
பொன்னாலையில் வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடைகள் மற்றும் பொதுக் கட்டடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இந்திய வீட்டுத்திட்டத்தினால் வழங்கப்பட்ட வீடொன்றின் ஓடுகள் தூக்கிவீசப்பட்டுள்ளன. வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை 2.30 மணியளவில் பலத்த மழையுடன் காற்று வீசியதுடன் மினி சூறாவளியும் ஆரம்பமானது. இந்தச் சூறாவளியால் வீடுகளின் கூரைகள் முற்றாகத் தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்தச் சூறாவளிக்காற்றினால்,...
இலங்கையின் வடக்கே, இராணுவ முகாம் ஒன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக பிரதமர் விமர்சித்துப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20-வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றியிருந்த போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். கிளிநொச்சியில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது, எதிர்க் கட்சித்...
இன்று மே தினமாகும். (சர்வதேச தொழிலாளர் தினம்) 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன...
Loading posts...
All posts loaded
No more posts
