Ad Widget

வெள்ளம் பாதிப்பு; யாழ். மாவட்ட செயலகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை யாழ். மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, நன்கொடைகளை வழங்க முன்வரும் நலன்விரும்பிகள் அதுதொடர்பான விடயங்களை அறிந்துகொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளருடன் 0773957894 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்தளிக்கப்படும் பொருட்கள்

01. பால்மா – (சிறுவர், பால் ஊட்டும் தாய்மார், கற்பிணித் தாய்மார், நோய்வாய்ப்பட்ட முதியவர்கள்)

02. சுகாதாரப் பொதி – சவர்க்காரம், டிற்றோல் (திரவம், திணமம்), ஓடிக்கலோன், சிறுவர்களுக்கான நுளம்புவலை, சமபோஷ, தூரிகை, பற்பசை, சித்தாலெப்பை, குளோரின், பெண்கள் நப்கின்)

03. சத்துணவு மற்றும் தேவையானபொருட்கள் – சமபோஷ, செருப்பு, சூப்பிபோத்தல், குழந்தைகளுக்கான சவர்க்காரம், குழந்தைகளுக்கான நப்கின்

04. உணவு – சோயா, நூடில்ஸ், பிஸ்கட், செரலெக்

05. உடைகள் – துவாய், பெட்சீட்

06. உறைவிடம் – நிலவிரிப்பு, பாய், தற்காலிக கூடாரம், பிளாஸ்டிக் பாய், கூரை விரிப்பு

உடுபுடைவை புதியவையாக இருக்க வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட பொருட்களை மிக விரைவாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்குமாறு அந்த மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts