- Wednesday
- March 4th, 2026
வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை மேதினத்தை கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளன வடக்கின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத்துறை காத்திரமான பங்களிப்பைச்...
வடக்கு, கிழக்கை மையப்படுத்தி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய ஆலோசனை பெறுதல் ஆகிய தேவைகளின் நிமித்தம் சில தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே அவர் மேற்படி மே...
உழைக்கும் மக்களின் உன்னத தினமான மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்று நிமிர்ந்துநிற்க உறுதியெடுப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மேதின செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ள்ளதாவது –...
சர்வதேச தொழிலாளர் தினமாகிய மேதினத்தை இம்முறை பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து கொண்டாடவுள்ளது. மேதின நிகழ்வானது நாளை காலை 10மணியளவில் ஊர்வலத்துடன் ஆரம்பமாகின்றது. பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஆரம்பமாகி குமாரசாமி வீதி வழியாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து பரமேஸ்வராச் சந்தியை அடைந்து இராமநாதன்...
வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளளார். மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.04.2016) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...
சாவகச்சேரி பகுதியில் இருவேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி சங்கத்தானை, மற்றும் மறுவன்புலோ பகுதியில் உள்ள இடங்களில் உள்ள காணி உரிமையாளர்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது இவை மீட்கப்பட்டன. நீதிமன்றின் அறிக்கையூடாக அனுமதி பெற்ற பொலிஸார் பொலிஸ்...
வர்த்தக வங்கிகளிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை வடிவமைத்து,பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை திருடிய சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பணம் மீளப்பெறும் அட்டையை உரிமையாளர்கள், இயந்திரத்தில் செலுத்தும்போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு கணக்கு உரிமையாளர்கள் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 26ஆம்...
முச்சக்கர வண்டிகளுக்கு ஆசணப்பட்டி அணிவதை பரிந்துரை செய்வதற்கு வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தீர்மானித்துள்ளது. முச்சக்கர வண்டி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து அவதானம் செலுத்திய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறினார். முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்ட போது மேலும் பல...
புதுக்குடியிருப்பில் உள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தின் செயற்பாடுகளைச்சகித்துக் கொள்ள முடியாத பாடசாலை மாணவிகள், அவர்களுடைய செயலை வெளியில் சொல்லமுடியாமல் மூடி மறைக்கின்றனர். இவ்வாறு சாடியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன். காலை, மாலை பயிற்சி என்று கூறி வீதியில் பயிற்சியை மேற்கொள்ளும்இராணுவத்தினர், மாணவிகளிடத்தில் முறைகேடாக நடந்து கொள்கின்றனர் என்று தமக்குமுறைப்பாடுகள் கிடைத்துள்ளன...
வெளிநாட்டு நாணய மாற்றில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாகவே கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்ததே தவிர வற்வரி அதிகரிப்பினால் அல்ல என அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர குறிப்பிட்டார். மேலும் மே 2 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகரிக்கப்ட்ட 15 சதவீத...
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்று சனிக்கிழமை காலை வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவையாகவும் தீர்வு திட்டம்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, சர்ச்சைக்குரிய முன்னாள் தூதுவர் ஒருவரை சந்தித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் செயற்படும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் விற்பனை செய்தமை மற்றும் பணியில் இருந்த ஊழியர் ஒருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்களுடன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க...
வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர். கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர். 24...
சமஷ்டி மூலம் இனவாதம் தலைதூக்கியுள்ளது என்பது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சர் பீ. ஹெரிஸனை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்வுத்திட்டம் தொடர்பான பிரேரணை நேற்று முன்தினம் சபாநாயகர்...
ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் தராகி சிவராமின் 11ஆம் ஆண்டு நினைவு நாளும் யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் 03.00 மணிக்கு இடம் பெற்றது. இதன்போது, மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் படுகொலையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிற்கான நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலியும் இடம்பெற்றது. இதையடுத்து, பிற்பகல் 03.30...
தமிழ் மக்கள் பேரவையின் இறுதித் தீர்வுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதித்திட்ட வரைபை தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் அரசியல் உபகுழு இணைப்பாளர் புவிதரன் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களான இரத்தினவேல், விஜயகுமார் மற்றும் காண்டீபன் ஆகிய ஐந்துபேரைக்...
சிறீலங்காவின் முன்னணி நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தைச் சந்தித்துள்ளார். தென்னிந்தியாவிலுள்ள ரஜனிகாந்தின் இல்லத்திற்கு விஜயம் செய்த ரஞ்சன்ராமநாயக்க அவருடன் படங்களும் எடுத்துக்கொண்டார். தென்னிந்திய சுப்பர்ஸ்டார் ரஜனிகாந்தைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமும் இராணுவத்தினருமே ஏற்கவேண்டும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். சிவராம் கொலைசெய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது கொலைக்கு நீதி வேண்டி நேற்று கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடல்நீரேரியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, சீனட்டியைச் சேர்ந்த சிவஞானம் சிவலோகநாதன் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 22ஆம் திகதி தொடக்கம் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....
மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், மல்லாகம் நீதிமன்றத்தில் வைத்து வியாழக்கிழமை (28) வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 2 இலட்சத்து 50...
Loading posts...
All posts loaded
No more posts
