- Wednesday
- March 4th, 2026
நெடுந்தீவுக்கும் - குறிகட்டுவானுக்கும் இடையில் கடல்வழி போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் குமுதினிப் படகின் நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி காலை 7.30, மற்றும் மாலை 2.30 மணிக்கு சேவையில் ஈடுபட்ட படகின் நேரம் மாற்றப்பட்டு முறையே காலை 6.30 மணி மற்றும் மாலை...
வட மாகாணத்துக்கான நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றை குறுகிய மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை பணித்துள்ளார். எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ள வட...
உலக தொழிலாளர் தினமான மே தினத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர். அர்ப்பணிப்பதே குறிக்கோள்: ஜனாதிபதி '2015இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தேசிய அமைப்பாளராக தற்போது செயற்படுகின்ற மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும, நாடாளுமன்றத்துக்குள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை வழிநடத்தும் முழுப்பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. கிருலப்பனையில் இடம்பெறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக்...
இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்றார் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமெரிக்க - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு பேரவை மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் உலகின் வேறு எந்த நாடும்...
"வடக்கு, கிழக்கில் தொடரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கைதுவேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும் நிலைமை அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.'' இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். "கைதுகள் இனிமேலும் தொடர்ந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தயக்கமின்றி எடுப்போம். காரணமின்றி கைது செய்யப்பட்டவர்கள் உடன்...
ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல்-நினோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா -நினோ' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத...
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் தனி மாநிலம் எனக்கூறி தமிழ் - சிங்கள மக்களிடையே மீண்டும் ஒரு பிரிவினையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுள்ளார். அத்துடன் கடந்த கால சம்பவங்களை மறந்து சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் போராளிகளுக்கு அமைச்சர் கூறியுள்ளார்....
கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே இதற்கமைவாக நாட்டிலுள்ள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள், தற்காப்புக் கலைஞர்கள், நடனம், தாள வாத்தியம், இசை, மஜிக், கிராமியக் கலை, கவி, திரைப்படம்...
இராணுவம் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றிய கொள்கை பிரகடனம் பற்றிய தீர்மானங்கள் எடுக்கபடுமென எதிர்பார்க்கின்றேன் என வனஜிவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஆராய்வு கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து வேலைத்திட்டங்கள்...
வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக முதலமைச்சர் சேஷல ஜயரட்ண தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாணத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்...
இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள...
எதிர்காலத்தில் கைதுகள் நடைபெற்றால், அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுமந்திரன் இதனை தெரிவித்தார். வடக்கில்...
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் புறக்கோட்டை மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த...
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 6.00...
அநுராதபுரம், சாலியபுர பிரதேசத்தில் வைத்து ரயிலொன்று தடம் புரண்டதில், வடக்குக்கான ரயில் போக்குவரது செயலிழந்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட உத்தரதேவி ரயிலே, இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சிலை அலங்கரிப்பாளர்களுக்கு எதிர்வரும் 2ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் அன்றைய தினத்தில் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கூட்டறவுச் சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது. இம்முறை மே தினம், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகின்ற காரணத்தால், மறுநாள் திங்கட்கிழமை சிகை அலங்கரிப்பாளர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மக்கள் அவதியுறுவதை அடுத்து, திருநாவுக்கரசரின் குருபூசைத் தினமான எதிர்வரும் இரண்டாம் திகதி சைவ மகா சபையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களின் தாகம் தீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாணத்தில் யாழ். நகர், காரைநகர் மற்றும் தெல்லிப்பழையிலும் கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை...
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு மே மாதம் 03ஆம் திகதி வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டள்ளதாக இ.போ.ச திணைக்களம் அறிவித்துள்ளது. 'மே தினக் கொண்டாட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் இ.போ.ச பஸ்களை கோரியுள்ளனர். இதனாலேயே அவர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டள்ளன' என்று இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (01)...
மனைவியின் காது, மூக்கு என்வற்றைக் கடித்துக் குதறியுள்ளார் கணவன். தென்மராட்சிப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. சவுதியில் இருந்து வந்த கணவன் தனது மனைவியுடன் வாக்குவாதப்பட்டுள்ளார். சவுதியில் மனைவியைக் கணவர் அடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாம். அங்கு கணவர்கள் மனைவியை அடிப்பதில்லையாம். மனைவியைத் தள்ளி கீழே விழுத்திவிட்டு அவர்களைக் கடித்தே காயம் ஏற்படுத்துவது வழக்கமாம். அவ்வாறே தனது கணவன் தன்னைத்...
Loading posts...
All posts loaded
No more posts
