Ad Widget

யாழ் சிறைச்சாலையில் 08 கைதிகள் விடுவிப்பு

யாழ் சிறைச்சாலையில் இருந்து வெசாக் பண்டிகையை முன்னிட்டு எட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலையின் பிரதம அதிகாரி இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இவர்களை இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலை செய்திருந்தனர்.

மேலும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்தாதன் காரணமாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த எட்டு பேரையே இன்றைய தினம் விடுதலை செய்திருந்ததாக யாழ் சிறைச்சாலையின் பிரதம அதிகாரி தெரிவித்தார்.

Related Posts