கிளிநொச்சி அமர்வுகளில், காணாமற்போனோர் குறித்து 283 புதிய முறைப்பாடுகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கடந்த திங்கட் கிழமை ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றது. இந்த அமர்வுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 1146 பேருக்கான அழைப்பினை விடுத்த போதும் 705 பேர் சாட்சிய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு 283 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி...

வேககட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து: தந்தை மகள் படுகாயம்!!! சாரதி தப்பியோட்டம்!!

பாடசாலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் தந்தையாருடன் சென்ற மாணவியை தனியார் பயணிகள் பேருந்து மோதித்தள்ளியதில் மகளும்,தந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் ஏ9 வீதி ஆஷா கடையடி, மீசாலையில் இடம்பெற்ற இவ் விபத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் தரம் 6ல் கல்வி பயிலும் மீசாலை மேற்கு ,மீசாலையைச் சேர்ந்த அருட்குமரன் ஆதினா...
Ad Widget

வவுனியாவில் பாடசாலை சென்ற 13வயது சிறுவனை காணவில்லை!!

வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 13வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் 13வயது பாடசாலை சிறுவன் 25.04.2016 பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக...

தாண்டிக்குளம் விவசாயபண்ணையை தாரை வார்த்தது வடக்கு மாகாணசபை!!

வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய...

புங்குடுதீவு மாணவி கொலை: 11ஆவது சந்தேகநபர் துன்புறுத்தப்படவில்லை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு 11ஆவது சந்தேகநபர் துன்புறுத்தப்படவில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி கொலைச் சம்பவத்தில் தனது மகனான உதயசூரியன் சுரேஸ்கரனை (11 ஆவது சந்தேகநபர்) அரச தரப்புச் சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துகின்றனர் என சந்தேகநபரின் தாயார் இலங்கை மனித உரிமைகள்...

தமிழக மீனவர்கள் மன்னார் கடலில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 21 இந்திய மீனவர்கள் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற் பிரதேசத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அலவி அக்ரம் தெரிவித்தார். மேற்படி இந்திய மீனவர்கள் பயணம் செய்த மூன்று மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கடந்த 30 நாள்களுக்குள் 33 பேர் கைது!!

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தொடர் கைதுகளால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30 நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கும், கொழும்பு நான்காம் மாடிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளனர். சிலர் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்புப்...

மைத்திரி, விக்கி சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைப்பு!

வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற இருந்தது. கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில்...

மஹிந்த விசுவாசிகளின் பதவி பறிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கும் அதன் கீழ்மட்ட அரசியல் கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக முயற்சித்து வருகின்றார். இதன் ஓர் அங்கமாக கட்சியை விமர்சிப்பவர்களிடமிருந்து தொகுதி, மாவட்ட அமைப்பாளர் பதவியைப் பறித்து அதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கி வருகின்றார். அந்தவகையில் சு.கவில் இருந்துகொண்டு மஹிந்த ஆதரவு அணியுடன் இணைந்து அரசியலை...

சம்பள அதிகரிப்பு: தனியார்துறைக்கு அரசு எச்சரிக்கை!!!

தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை செயற்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "தனியார்துறையினரின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம்...

பிணையில் விடுவிக்கப்பட்டார் சிவகரன்!

ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் இவர் நேற்று வியாழக்கிழமை பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதற்கமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு இதன்போது நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார். மேலும்...

இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்காது அரசு!வடக்கு மாகாண சபைத் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து!!

"இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் - தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது." இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறைமையே அவசியம் என்று வடக்கு...

பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 15 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகளினால், சட்டவிரோதமான முறையில் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்த 15 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ் சுகாதார திணைக்கள பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து...

யாழில் 27 இளைஞர்கள் கைது!

யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என...

இலங்கை விமானப் படை ஹெலிக்கொப்டர் விபத்து

ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விபத்தினால் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புக்களே ஏற்படவில்லை என, விமானப் படை ஊடகப் பிரிவு...

வடக்கில் விக்னேஸ்வரனும் தெற்கில் மஹிந்தவும் இனவாதத்தை விதைக்கின்றனர்!

வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரும் இனவாதத்தை விதைப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனவாத அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை எழுப்ப முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வட மாகாணத்தில் முதல்வர்...

முன்னாள் விடுதலை புலிகளின் கைதுக்கு காரணம் தற்கொலை அங்கிகள் மீட்பே!!

முன்னாள் விடுதலை புலிகளின் பிரதேசிய தலைவர்கள் சிலரை கைது செய்தமைக்கான காரணம், சமீபத்தில் வடக்கில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைவாகவே என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். பி.பி.சி வானொலிக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த கைதுகளை  காவற்துறை பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டதாக  தெரிவித்திருந்தார்.முன்னாள் விடுதலை புலிகளின்...

வான்புலிகள் பயன்படுத்திய விமானம் பற்றிய தகவல்கள்!

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. விடுதலைப்புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன் வல்லமை குறித்து உலக நாடுகளை வியந்து பார்த்த காலம் இருந்தது. விடுதலைப்புலிகளின்...

வெள்ளை வானில் இருவர் கடத்தல்?

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், வெள்ளை வானில் வந்தவர்களால் புதன்கிழமை (27) மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை. ஜோர்ஜ் இராஜநாயகம் மற்றும் வி.மைக்கல் என்ற இருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்களை வானில்...

தற்கொலை அங்கி விவகாரம்; மேலும் இருவர் விரைவில் கைதாவர்?

சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை விரைவில் கைது செய்யவுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை அங்கி மீட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த சந்தேக நபர்கள் பயணித்த இரண்டு வான்கள் உட்பட 8 வாகனங்களை பயங்கரவாத...
Loading posts...

All posts loaded

No more posts