Ad Widget

எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ இரா. சம்பந்தன் அவர்களின் வெசாக்தின செய்தி

புத்தர் பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் இறப்பு உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாக உலகவாழ் பெளத்த மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான புனித வெசாக் போயா தினமானது இலங்கையர்களான எம் அனைவருக்கும் மிகவும் முக்கிய சமய தினமொன்றாக விளங்குகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இலங்கை மக்களுக்கு இப்புனித போயா தினத்தில்
வாழ்த்துவதற்கு வாய்ப்புக் கிட்டியமையானது எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

புத்தர் பெருமான் அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் உலகவாழ் அனைத்து மக்களிடமும் பொறாமை, குரோத எண்ணங்கள் என்பன அகன்று, மன அழுக்கற்ற நற்கரும சிந்தனைகள் அவர்களது உள்ளங்களில் பிறக்க வேண்டுமென பிரார்த்திப்பதுடன், பஞ்சசீலங்களைக் கடைப்பிடிக்கின்ற சமூகமொன்று தோற்றம்பெற்று அனைத்தின மக்களிடையேயும் சமத்துவம், சகவாழ்வு என்பன உருவாகி உலக சமாதானம் மலர வேண்டுமென இப்புனித வெசாக் போயா தினத்திலே நான் பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் இப்புனித வெசாக் தினமானது சிறப்புற வாழ்த்துகின்றேன்.

 

Related Posts