Ad Widget

உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லை

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையென மறுதலித்துள்ளார் வடமாகாண ஆளுநர்.

இதற்கு ஆதாரமாக உரையின் இறுவெட்டினையும் வட மாகாண சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

வட மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பிற்கான யோசணையில் சமஸ்டி முறையிலான தீர்வை முன்வைத்து அது பிரேரணையாகவும் ஏற்றுக் கொள்ளப்ப ட்டிரு ந்தது.

குறித்த பிரேரணை தொடர்பில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கொழும்பில் கருத்து வெளியிட்டதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்த்து.

இவ்வாறு செய்திகள் வெளிவந்தமையினையிட்டு குறித்த செய்தியினையும் மேலும் இரு செய்திகளின் பிரகாரமும் ஆளுநர் தனது பொறுப்பின் எல்லையை மீறி விட்டார் அதனால் அவராக பதவி விலகவேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை மீளப் பெறவேண்டும் . என குரல்கள் எழுந்திருந்தன.

இதற்கு பதிலளித்துள்ள ஆளுநர் தமக்கு எது வேண்டும் என கோரும் உரிமை ஒரு மாகாணத்துக்கு உண்டு அவர்கள் எதைக்கோரினாலும் அது சட்டம் ஆக்கப்படவேண்டும்.

சட்டத்தினை பாராளுமன்றமே உருவாக்கும் என்ற கருத்தையே தெரிவித்ததாக கூறியுள்ளதுடன் இதற்கு ஆதாரமாக தான் ஆற்றிய உரையின் இறுவெட்டின் ஒரு பிரதியினையும் சமர்ப்பித்துள்ளாதாக தெரியவருகின்றது.

Related Posts