Ad Widget

மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி வேண்டும்!

வவுனியா உக்கிளாங்குளத்தில் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி (வயது – 13) பாலியல் துண்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்றுவரை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன என்று தாயார் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர் எனவும், விசாரணைகள் பின் செல்வதால் குற்றவாளி தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது எனவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 16.02.2016 அன்று வீட்டில் தனியாக நின்றபோது பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி பாலியல் துண்புறுத்தப்பட்டு பாடுகொலை செய்யப்பட்டார். எனினும், இன்று வரையில் குற்றவாளி இனங்காணப்படவில்லை. சந்தேகத்தில் அயல் வீட்டில் இருந்தவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு நீதியைப் பெற்றுத்தருமாறு ஹரிஸ்ணவியின் தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts