தி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் வட மாகாணத்தில் விசேட மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பிரதம அதீதியாக கலந்து கொண்டு மத்தியஸ்தர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சியிலும், கிழக்கு மகாணத்தில் திருகோணமலை ,மட்டக்களப்பிலும், வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்திலும் இந்த மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் மத்தியஸ்த சபைகள் ஆணைக்கழுவின் தவிசாளர் ஹெக்டர் எஸ். யாபா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.