இராணுவ தண்ணீர் பவுசர் மோதி தாய் பலி, மகள் படுகாயம் -யாழில் பரிதாப சம்பவம்

யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை...

துரையப்பா விளையாட்டரங்கம் திறந்துவைப்பு

இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து திறந்துவைத்துள்ளனர். யாழ். நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக விளையாட்டு ஆர்வலர்களின் பயன்பாட்டிற்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த...
Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு பலி

யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோன துயரச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஒட்சிசன் வழங்கவேண்டிய நிலையில்இ விடுதியில் ஒட்சிசன் சிலிண்டர் இருக்கவில்லை. இதுவே குழந்தை மரணமடையக் காரணம்...

ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்

தேசிய பரீட்சைகளாகிய புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை ஆகியன ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடைபெற உள்ளமையால், தம்மைத் தயார்ப்படுத்தும் மாணவர்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் யாழ் குடாநாட்டில் உள்ள...

உதய கம்மன்பில கைது

பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று காலையே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மர்மமான முறையில் சிறுமி கொலை

மஹியங்கனை - ரிதிமாலியெத்த  - மோரான பிரதேசத்தில் 9 வயதான மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பி கொண்டிருந்த போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.பாடசாலையில் இருந்து 2.5 கிலோ மீற்றர் தூரம் அளவில் இவரின் வீடு உள்ளதாக தெரியவந்துள்ளது.இதனோடு அவர் செல்லும் பாதை ஆள் நடமாட்டமில்லாத பிரதேசம்...

இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்ததுக்கு போதிய ஆதாரங்கள் உண்டு! ஸ்டீபன் ரப் அதிரடி அறிவிப்பு!!

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான ஆனால் ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் கார்டியனுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு...

கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றினால் சட்ட நடவடிக்கை

கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணியாற்றினால் அந்த நிறுவனம் தடை பட்டியலுக்குள் சேர்க்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் சுகாதார சேவைகளுக்கான கட்டணத்தை 20 வீதம் அதிகரிக்குமாறு தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் நேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்....

சொந்த நிலங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்- வலி.வடக்கு மக்கள்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்த நிலங்களை விடுவிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக வலிகாமம் வடக்கு மக்கள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை நம்பி வாக்களித்த தம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பட்டதில் நேற்று வெள்ளிக்கிழமை...

கோட்டாபய, பெசில் ராஜபக்ச ஆகியோரை விசாரணை செய்யவும்; பரணகம

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பெசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம் தரப்பினரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று மெக்ஸ்வல் பரணகம கோரிக்கை விடுத்தார். செய்தி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே காணாமல்போனோர் தொடர்பாக முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி...

மஹிந்த அரசுக்கும் மைத்திரி ரணில் அரசுக்கும் எதுவிதமான வேறுபாடுமில்லை- கோகிலவாணி

நேற்றய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், கடந்த தேர்தலின்போது...

மாத்தளையில் காணாமல் போன மாணவர்கள் யாழில் பிடிபட்டனர்!

மாத்தளை நாவுல பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 8 மற்றும் 9ம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணாமல் போயுள்ளனர். கடந்த 14ம் திகதி குறித்த இருவரும் காணாமல் போயுள்ள நிலையில் 15ம் திகதி...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் சொன்ன விநோத கதை

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், தான் ஏன் கஞ்சா செடியை வளர்த்தேன்? என்பதற்கு விநோதமான காரணத்தை கிளிநொச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) கூறினார். கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்தனர். மேற்படி நபர் 3...

ஜனாதிபதி, பிரதமரை முகப்புத்தகத்தில் மிரட்டியவர், ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், முகப்புத்தகத்தில் மிரட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுகத் குமார லக்மன, தான் மலேஷியாவில் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று, மலேஷியாவில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தன்னைக் கைதுசெய்து 5 நாட்கள் தடுத்துவைத்துப் பின்னர் இலங்கைக்கு...

மோட்டார் சைக்கிளை பந்தாடியது பஸ்: மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் பலி

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில், பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ்ஸே, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

புலிகள் புதைத்துவைத்திருந்த குண்டுகள் மீட்பு

வன்னி விமானப்படைத்தளத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, வவுனியா பாலம்பிட்டி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருதொகை குண்டுகளை, அப்பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில், புலிகளின் பதுங்குழிகள் இருந்த இடத்திலிருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டன என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர். 74 மிதிவெடிகள், 6 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் மூன்று...

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனந்தி நிவாரண உதவி

மலையக பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நிவாரண உதவிகளை 15.06.2016 அன்று புதன்கிழமை வழங்கி வைத்தார். இதற்கமைய புசல்லாவ பகுதியில் 23 குடும்பங்களுக்கும், தோரகலவில் 33 குடும்பங்களுக்கும், கலத்தவில பகுதியில் 11 குடும்பங்களுக்கும் தேவையான உலர் உணவு மற்றும்...

சுகாதார சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது

தனியார் சுகாதார சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்ட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனை கட்டணங்கள், மருத்துவ கட்டணங்கள், மற்றும் வைத்தியசாலை கட்டணங்களை அதிகரிக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். தனியார் வைத்தியசாலைகளின் பிரதானிகளுடன் கொழும்பில் நேற்று காலை...

சுசந்திகா வைத்தியசாலையில் அனுமதி; கணவன் கைது

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம், இந்த ஆண்டு இறுதிக்குள் GSP+ சலுகையை பெற்றுக் கொள்வோம்

நாட்டின் பொருளாதார நிலமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார். தனது விஷேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நேற்று நீக்கப்பட்டது. நாம் அதிகாரத்திற்கு வந்தால் இந்த தடையை நீக்குவதாக 2014ம் ஆண்டு...
Loading posts...

All posts loaded

No more posts