Ad Widget

விபத்தில் பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த வேன் ஒன்று பண்ணைப் பாலப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பண்ணை பாலப் பகுதியில் நேற்று (11) திங்கட்கிழமை மதியம் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் ஆளவெட்டி பகுதியைச் சேர்ந்த சிறிதரன் சிவமலர் (வயது 49) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த தமது உறவினர்களுடன் தீவக பகுதிக்கு சென்று விட்டு, மீண்டும் திரும்பி வரும் போது, பண்ணைப் பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

வாகன சாரதி நித்திரையானதால், அருகில் உள்ள போஸ்ட் மரத்துடன் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவரின் சடலமும் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts