Ad Widget

சட்டவிரோத கருகலைப்பு: தனியார் சிகிசை நிலையத்திற்கு சீல்

கிளிநொச்சி தா்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாா் சிகிச்சை நிலையம் நேற்று கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதிகாரிகளினால சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிகிச்சை நிலையத்தில் சிறுமி ஒருவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டிற்கு அமையவே சீல் வைக்கப்பட்டதாக தா்மபுரம் பொலீஸ் தெரிவித்துள்ளனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியுடன் 25 வயது இளைஞன் ஒருவா் பாலியல்உறவு கொண்டுள்ளார் இதன் மூலம் குறித்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளார்

இதனையடுத்து சிறுமியின் தந்தை சிறுமியை மேற்குறித்த தனியார் சிகிசை நிலையத்திற்கு அழைத்துச் சென்று நிலைமையினை கூறியதனையடுத்து சிகிச்சை நிலையத்திற்கு பொறுப்பான மருத்துவா் கருகலைப்புக்கான குளிசைகளை வழங்கியதாக சிறுமி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலீஸார் குறிப்பிடுகின்றனா்.

சிகிச்சையின் பின்னா் அதிகளவு இரத்த பெருக்கு காரணமாக சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திங்கள் 11-07-2016 காலை குறித்த தனியார் சிகிச்சை நிலையத்திற்கு பொறுப்பான மருத்துவா் தா்மபுரம் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது சிகிச்சை நிலையம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய திங்கள் 11-07-2016 மாலை சீல் வைக்கப்பட்டது.

Related Posts