யாழில் அப்துல்கலாமின் சிலை திறந்து வைத்து முதலமைச்சர் உரை

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். யாழ் பொது நூலகத்தில்...

விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவருக்கு கனடாவில் தஞ்சம்!!

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் ஒருவருக்கு கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கப்பல் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட ரவிசங்கர் கனகராஜா எனப்படும் சங்கிலி என்பவருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. பாரியளவிலான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட மூன்று கப்பல்களை...
Ad Widget

அரசின் காணி சுவீகரிப்பு செய்தி ஆச்சரியத்தை அளிக்கின்றது-ஆனந்தசங்கரி

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 65 ஹெக்டேர் காணியை மீளக்குடியேற்றத்திற்காக அரசு சுவிகரிக்கும் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த யோசனை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமையவே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மிகவும் சிறந்த,...

வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு தொழிற்பயிற்சி

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியின் மூலமாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் அணுசரனையில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் ஆகியோருக்கான தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வீட்டு மின் உபயோகப் பொருள்களை திருத்துதல், தையல் வேலை ஆகிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும்...

சிறைபிடிக்கப்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் விடுதலை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் அனுமதியின்றி கடலட்டை தொழில் ஈடுபட்டு, கட்டைக்காடு மீனவர் ஒருவரை தாக்கிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 165 மீனவர்கள் கட்டைக்காடு மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பிரதேச செயலார் ஆகியோரின் சமரச முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 165 மீனவர்கள், 55 படகுகளில்...

தோல் நோய்கள் தொடர்பில் வீடுவீடாக அறிவுரை

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழைக்குப் பின்னர், தோல் வியாதிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினரால் வீடு வீடாகச் சென்று ஆண், பெண், சிறுவர்கள் உட்பட வீடுகளில் தங்கியுள்ளவர்களை உடற்பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். வியாழக்கிழமை (16) காலை நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராம அலுவலர் பிரிவுகளில் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்ப...

யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். அண்மை காலங்களில் வடக்கு...

ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது

தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மத்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்படும் என்று, தமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.இது தொடர்பில் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர...

ஜனாதிபதி‬ வருகையின் போது ‪வலி‬.வடக்கில் மேலதிக ‪‎காணிகள்‬ விடுவிப்பில் ஏந்த ஏற்பாடும் ‪‎இல்லை‬

யாழ்ப்பாணத்துக்கு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் நிலையில் அவரது வருகையின் போது வலி.வடக்கில் மேலதிக காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வமான எந்த நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முன்னர் தமக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிலவிடுவிப்பு மற்றும் மீள்குடியேற்ற அறிவிப்பை யாழ்ப்பாணம் வருகையின் போது ஜனாதிபதி விடுவிப்பார் என...

காளி கோவிலை பிள்ளையார் கோவிலாக மாற்றிய இராணுவம்

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வளாகத்தினுள் இராணுவத்தினர் புத்தர் சிலையினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். அத்துடன் அங்கு இருந்த காளி கோவிலையும் பிள்ளையார் கோவிலாக மாற்றி உள்ளனர். யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைககளும் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி முதல் உள் நாட்டு யுத்தம் காரணமாக...

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பரிந்துரை

கல்முனை இஸ்லாமிய பெண்ணின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சின்னலெப்பை அலாவுதீன் என்பவரைக் கொலை செய்ததாக அவரது மனைவி கலந்தர் ரூபியா என்ற பெண்ணுக்கு கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்...

‘கிளிநொச்சியில் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் வசித்து வரும் 15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உத்தரவிட்டார். தாய், தந்தை இல்லாத இந்தச் சிறுமி, சிறுவர் இல்லமொன்றில் இருந்து அதன் பின்னர், அம்மம்மா மற்றும் மாமா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி இளைஞன்,...

தொலைபேசி பயன்பாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி மட்டுமே கையடக்கத் தொலைபேசியை சரியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல்களுக்கு வரும் போது ஒரு சிலருடைய தொலைபேசிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக கலந்துரையாடல்களை மேற்கொள்வது கடினம். ஜனாதிபதி தனது அலுவலகத்துக்கு வந்தவுடன் தனது கையடக்கத் தொலைபேசி நிறுத்தி...

பிரதமரின் சாதகமான பதிலை எதிர்பார்க்கும் முதலமைச்சர்!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடத்தெரிவு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதகமான பதில் தருவார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மத்திய...

அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் முடிவு

அஞ்சல் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. அஞ்சல் சேவையாளர்களின் தொழிற்சங்க முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பு முறைமை மற்றும் மேலதிக நேர பணிகளுக்கான கொடுப்பனவுகளை மீள வழங்கல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் நடத்தப்பட்டது. பிரதமரின் செயலாளர், அரச நிர்வாக அமைச்சு மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சு...

திங்கள் விடுமுறை இல்லை

பொசன் போயா விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை (19ஆம் திகதி) வருகின்றபோதிலும், அதற்கு அடுத்த நாளான 20ஆம் திகதி, விசேட விடுமுறை இல்லை என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை! நீதியைப் பெற்றுத்தருவது ஐ.நாவின் கடமை!! ஆணையாளரிடம் சுமந்திரன் நேரில் வலியுறுத்து !!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்ஹுசைனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று சந்தித்துப் பேசினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை ஆணையாளர் செயித் அல்ஹுசைன் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு முன்னர் தற்போதைய நிலைமைகள்...

அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தல்!

யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் ஒழிந்து இப்போது அமைதி நிலவுவதாகவும், இந்த அமைதிய சீர்குலைப்பதற்கு எந்த ஒரு சக்திக்கும் இடமளிக்க முடியாதெனவும் அவ்வாறு அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் புதிதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரானிஸ்லாஸுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில்...

மூலதன ஆதாய வரியை அறவிடுவதற்கு தீர்மானம்

மூலதன ஆதாய வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலம் திருத்தப்பட்டு பாராளுமன்றத்தில் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். அந்த வகையில் நாட்டில் காணப்படுகின்ற வருமான ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வரி எவ்வாறு என்ன அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து வரைவிலக்கணம் செய்யப்படும் எனவும்...

அத்துமீறிய இந்திய மீனவர்கள் மூவர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு தெற்கே கோவளம் கடற்பரப்பினுள் வைத்து மூன்று இந்திய மீனவர்களை நேற்று அதிகாலை கைது செய்துள்ளதாக யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். காரைநகர் கடற்பரப்பினுள் இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்கள் மூவரையும் கைது செய்ததுடன், கைபற்றப்பட்ட விசைப் படகினை காங்கேசன்துறை...
Loading posts...

All posts loaded

No more posts