Ad Widget

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர் செய்யவில்லை

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையார் ஒருவரையே கடந்த 05 ஆம் திகதி யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஆட்டோ சாரதியான குறித்த குடும்பஸ்தரை இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை. ஆஜர்படுத்தாத காரணத்தினால், குறித்த குடும்பஸ்தர் எங்கு என தெரியாது என மனைவி மற்றும் பெற்றோர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அதன்பிரகாரம், சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்றும், குறித்த குடும்பஸ்தர் பற்றிய தகவல்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்துமாறும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts