Ad Widget

வடக்கில் வேலையின்மையால் 35,000 பேர் பாதிப்பு

வட மாகாணத்தில் சுமார் 35,000 பேர் வரை வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது வட மாகாணத்தில் 3200 நிறுவனங்கள் வரை இருப்பதாக குறிப்பிட்ட அவர் அதில் பத்தாயிரம் வரையோனோர் பணி புரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வேளையே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மாகாணம் என்ற வகையில் வடக்கை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts