- Sunday
- March 8th, 2026
வாழ்வின் எழுச்சி சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு குறித்து யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் ஆ. மகேஸ்வரன் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மீளாய்வுக் கூட்டத்திற்கு பிரதம விருந்திரனாக, சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொண்டு,...
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் சுமார் 06 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இலங்கை வாலிபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் போதைப் பொருள்...
தகவல் அறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று முன்தினம் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள்...
வெளிநாடுகளில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளரின் பணிப்புரையின் கீழ் அவ்வாறானவர்களுக்கான கொன்சியூலர் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலைமை மாற்றப்பட்டிருப்பதுடன், கடந்த காலத்தில் ஏற்பட்ட அசௌகரியங்கள்...
தகவலறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதானது கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிவதைப் போன்றது. இந்தச் சட்டமூலத்தினால் எதிர்க்கட்சியினருக்கே அதிகமான நன்மை கிடைக்கப் போகிறது என வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்திய பல உலக நாடுகள் தமது இரண்டாவது ஆட்சிக் காலப் பகுதியிலேயே இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன. எனினும்...
தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் வளங்களை சூறையாட சிலர் முயற்சிப்பதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தாம் கலந்து கொண்டிருந்ததாகவும், இதன்போது வடமாகாணத்துக்கு கிடைக்கப்பெறவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய வடக்கு...
வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக் காணி விடுவிப்பு தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதுடன் உரியவர்களிடம் காணி பத்திரங்களையும் வழங்கவுள்ளார்....
அச்சுவேலி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள் ஐவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெருமாள் சிவகுமார், வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார். தழிழ்நாடு மாநிலம் நாகப்பட்டிணம் பகுதியில் இருந்து ஒரு படகுடன் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களின் படகு எரிபொருள் தீர்ந்துள்ளது. இதனால்...
சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கசிப்பு விற்ற அச்செழு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை புதன்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு வாங்குபவர்கள் போல, சிவில் உடையில் பொலிஸார் சென்றுள்ளனர். 200 ரூபாய் பணத்தைக் கொடுக்க சந்தேகநபர், 750 மில்லிலீற்றர் கசிப்பை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இதன்போது, அந்நபரை...
யாழ்.காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நடந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்ரதத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் தாவடி காளி கோவிலடியினைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது17) என்னும் மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வீதியில் இருந்த பாதசாரிக்...
தென்னிந்திய திரைப்படங்களே யாழ்.குடாநாட்டில் “ஆவா குறூப்”, “ரொக்டீம்” போன்ற குண்டர் குழுக்கள் உருவாக காரணமாக உள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரட்நாயக்க தெரிவித்தார். 23 இன் கீழ் 2 இல் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்...
மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நகர்ப்புறப் பாடாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை சாவகச்சேரி நீதிமன்றம் 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தவரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது, கடந்த 15 ஆம் திகதி சாவகச்சேரி நகர்ப்புறப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிற்கும் ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனைத் தாக்கியபோது குறித்த மாணவன் காயமடைந்த...
திருகோணமலை- குச்சவௌி பொலிஸாரினால் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கேகாலை பகுதியைச்சேர்ந்த ஜே.ஏ.துஸ்வந்த கயான் ஜயவீர (46 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து...
யாழ்ப்பாண வைத்தியசாலையில் பெரும் சாதனையொன்றுநிலை நாட்டப்பட்டுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதி நுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம் 4 வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மன்னாரை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது, வலது கையின்மீது...
ஒரு மாதத்தில் ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்குக் குறைவாகவும், ஒரு நாளைக்கு 33ஆயிரத்தை விடக் குறைவாகவும் வருமானத்தைப் பெறும் சிறு தொழில் முயற்சியாளர்கள் வற் வரியில் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தில் எவரையும் குழம்பத் தேவையில்லையெனவும், வரி கட்டாதவர்களே தேவையற்ற முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற...
2016 ஜனவரி முதல் மே 19 வரை யாழ். குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50,000ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு முதல் 19.05.2016 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் 74 கொலைகளும், 184...
புற்றுநோயாளர்களுக்கு வரையறையின்றி நிதியை செலவிட நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். புற்றுநோயாளர் ஒருவருக்கு இதுவரை அரசாங்கம் 15 இலட்சம் ரூபாய் நிதி செலவிட்டதாக, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், இதுபோன்று வரையறை விதிக்கப்பட்டுள்ளமையால், குறைந்த வருமானம் பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது குறித்து...
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை குழு உருவாக்குவது என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த...
யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் உள்ள மின்மாற்றியின் மேலே உள்ள உயரழுத்த மின் கம்பி ஒன்று நேற்று மாலை 3.45 மணியளவில் அறுந்து நடுத்தெருவில் விழுந்தது. நிலத்தில் கம்பி அறுந்து விழுந்தவுடன் பாரிய சத்தமும், தீப்பொறிகளும் எழுந்தன. அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் பெண்ணொருவர் இதனைப் பார்த்து திடீரென அதிர்ச்சி அடைந்து...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட இன்னசிற்றி ரயில் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.45 மணிக்கு இடம்பெற்றது. கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட இராமாவில் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே பலியானவராவார். சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி...
Loading posts...
All posts loaded
No more posts
