அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி இன்று ஆரம்பிக்கப்படும்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார். பதுளை பிரதேசத்தில் இன்று ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார். அத்துடன் இம்மாத இறுதிப் பகுதியில் பாத யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அரசியல் கட்சியல்லாமல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியாக பலம் பெறுவதாக...

பங்களாதேஷ் தாக்குதலில் பணயக்கைதிகளா இரு இலங்கையர்களும் சிறைபிடிப்பு

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர். இலங்கையர் இருவர் உள்ளிட்ட பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகம் கூறுகிறது. அந்த இருவருடைய குடும்பத்திற்கும்...
Ad Widget

வடக்கில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், அவற்றுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் யாழ் வணிகர் கழகம் முன்வந்துள்ளது. இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ் வணிகர் கழகத்திற்கு ஏற்கெனவே கிடைத்துள்ளது. இவ்வாறான...

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் 7 படகுகள் சேதம்

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஏழு படகுகள் சேதமடைந்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரத்து 148 மீனவர்கள் புதன்கிழமை இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீதே இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் மீனவர்களின்...

யாழ்ப்பாணத்தில் களிமண் சிற்பப் பயிற்சி நெறி

திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள களிமண் சிற்ப பயிற்சிநெறி, இனிவரும் காலங்களில் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெறுமனெ அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் இப்பயிற்சி நெறி ஆரம்பிகப்பட்டுள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடம் வடமாகாணத்தின் முதலாவது ஓவியக்கூடமாக யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டு மூன்றாவது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதன்...

மனித உரிமைகள் ஆணையாளரின பற்றுறுதியை வரவேற்கின்றோம்

இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையானது, நம்பகத்தன்மையற்றது என்பதால், சுயாதீனமானதும் பக்கச் சார்பற்றதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான ஐக்கிய...

இன்று முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை

வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பு இன்று (01) முதல் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் 03ம் திகதி முதல் போராட்டத்தில் இறங்குவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் செயலாளர் அன்ஞன பிரியன்ஜித் கூறினார். எவ்வாறாயினும் தாம் போராட்டங்களில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ்...

பாவனையாளர் முறைப்பாட்டு பிரிவு ஆரம்பம். முறைப்பாட்டு எண்களும் அறிவிப்பு

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. மேற்படி முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பாக புலனாய்வு அதிகாரி மு.றம்ஸீன் அவர்களுடன் புலனாய்வு அதிகாரியான...

கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் இளைஞா் யுவதிகள் வேலையின்றி உள்ளனா்

கிளிநொச்சியில் இருபதாயிரம் இளைஞர் ,யுவதிகள் வேலைவாய்ப்பு அற்ற நிலையில் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்துள்ளார் மனிதவலு மற்றும் வேலைவாயப்பு திணைக்களத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் 30-06-2016 (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் குறித்த நிலையம்...

வடமாகாணசபையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் சி.வி. கோரிக்கை

சில அரச அலுவலர்களின் தன்னிச்சையான தன்னலம் கருதிய நடவடிக்கைகள் எமக்கு வருத்தத்தைத் தருகின்றது. எம்மக்களை உதாசீனஞ் செய்து மாற்றாருக்கு மனமகிழ்வை ஊட்டப் பாடுபடும் அவர்களின் மனோநிலை மாற வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா சிதம்பரபுரம் குடியேற்ற கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம்...

மோசடி கும்பலில் இருந்து தப்பிக்க விழிப்படையுங்கள். மற்றவர்களையும் விழிப்படைய செய்யுங்கள்

யாழில் இளைஞர் யுவதிகளை குறிவைத்து மோசடி வியாபாரத்தில் ஒரு நிறுவனம் தனது மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த மோசடியானது இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறைமையை கொண்டதாகும். யார் அவர்கள் ? கொழும்பை தலைமையகமாக கொண்டு 2009ம் ஆண்டு அந்த நிறுவனம் ஸ்தாபிக்க ப்பட்டு உள்ளது. பின்னர் மட்டக்களப்பு , அனுராதபுரம் , கண்டி , மாத்தறை...

தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டேன்; சுவாமிநாதன்

தமிழ் மக்களுக்கு எதிராக தான் எதனையும் செய்யவில்லை என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா - சிதம்பரபுர முகாமில் வாழ்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி அமைச்சர், தமிழ் மக்களுக்கு தான் துரோகம் இழைத்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்றும்...

மன்னாரில் கடத்தப்பட்ட குடும்பஸ்தருக்கு சித்திரவதை

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தில் புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் மன்னார் உயிலங்குளம் அருட்தந்தையின் பாதுகாப்பில் இருந்த நிலையில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மதுவந்தி நேற்று வியாழக்கிழமை மன்னார்...

அமெரிக்காவின் கண்காணிப்பு பட்டியலில் இலங்கை!

வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன. இலங்கையின் ஆண்கள்...

போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளிலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாங்குளம், வட்டுவாகல், ஒட்டுசுட்டான், கொக்கிளாய், மண்ணாகண்டல், சமளம்குளம், புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் மற்றும் கோப்பாபுலவு...

சிதம்பரபுர முகாமுக்கு முற்றுப்புள்ளி!

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களாக வசித்து வந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டு அதற்கான உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வடக்கில் யுத்தம் நடைபெற்றவேளையில் சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து இந்தியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்த மக்கள், 1992 ஆம் ஆண்டு சிதம்பர முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில் 193...

புலிகளின் முகாமில் ஆயுதங்கள் இல்லாமையால் அகழ்வுப் பணி தோல்வி

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, நேற்று வியாழக்கிழமை (30) காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கிளிநொச்சி பொலிஸார், அப்பகுதி கிராம அலுவலர், சமாதான நீதிவான் ஆகியோர் முன்னிலையில், அப்பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன....

யாழ் பாதுகாப்புப்படை தலைமையகம் 20 ஆவது வருடப் பூர்த்தி!

யாழ் பாதுகாப்பு படை தலைமையகம் அதன் 20 ஆவது வருடப் பூர்த்தியை மிக விமரிசையாக கொண்டாடியது. இதனையொட்டி ஜுன் மாதம் 19 ஆம் திகதி முதல் அங்கு பல்வேறு ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன. ஞாபகார்த்த நிகழ்வுகள் யாவும் விஷேட போதி பூசையினை தொடர்ந்து இடம்பெற்றன. அத்துடன் இந்நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவையாற்றும் படைவீரர்கள்...

இனிமேல் எனது அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே

இனிமேல் எனது அரசியல் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்விலேயே அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்....

பாதாள உலகக்கோஷ்டி தலைவரின் இறுதி அஞ்சலிக்கு மலர்தூவிய கெலி!

பிரபல பாதாள உலகத் தலைவர் ஒருவரின் இறுதிக்கிரியையின்போது உலங்குவானூர்தி யிலிருந்து மலர்கள் தூவப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் குறித்த பாதாள உலகக் குழுத் தலைவரின் உடல் இரத்மனாலையிலிருந்து மயானத்துக்கு எடுத்துச்செல்கையில் உலங்குவானூர்தியிலிருந்து பூக்கள் தூவப்பட்டுக்கொண்டிருந்தது. அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் மஹர நீதிமன்றத்துக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவருமான...
Loading posts...

All posts loaded

No more posts