Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் இனவாத மோதல் அல்ல: உயர்கல்வி அமைச்சர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலானது இனவாத மோதல் அல்லவென உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான மோதல்கள் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறுவதாகவும், அனைத்து மக்கள் மத்தியிலும் தீவிரவாதிகள் சிலர் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மோதலை அடுத்து சகல பீடங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்கலைக்கழகத்தை மீள் திறப்பது குறித்து அனைத்து தரப்பினருடனும் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலை அடுத்தே தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts