நியமனக் கடிதத்தைப் பெற்றார் இந்திரஜித்

மத்திய வங்கி ஆளுனராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொக்டர் இந்திரஜித் குமாரசுவாமி தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்

யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காங்சேசன்துறை பகுதி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் விடுவிக்காது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு...
Ad Widget

எரிபொருள் விலை அதிகரிக்காது!

எந்தவகையான எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபன தலைவர் ஜி.வீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பலவற்றினதும் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் பரிசளிப்பு விழா

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா தீர்த்தத் திருவிழாவின்போது நடைபெற்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேகன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலய அதிபர்...

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கி புதிய ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய...

கணித, விஞ்ஞானத்தில் 40 சதவீத சித்தியை எட்டவேண்டும்

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் வடமாகாணத்தில் 18 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் தற்போது சித்தியடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதனை 40 சதவீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டு கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம்...

ஊடகங்கள் மீது சட்டத்தரணிகள் பாய்ச்சல்

ஊடகங்கள் நீதித்துறையில் தலையீடுகள் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காது, எவராவது சொல்வதைக் கேட்டு நீதிமன்ற செய்திகளை சில ஊடகங்கள் வெளியிடுகின்ற என வரணி மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறினர். வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 12 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல்...

பங்களாதேஷ் தாக்குதல்: இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வாடகை வீடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும்- தேர்தல் ஆணையாளர்

வாடகை விடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வீடுகளில் தங்கியிருப்பவர்களும் குறித்த முகவரிகளின் கீழ் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்....

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மீண்டும் தமிழர் ஒருவர் நியமனம்!

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதியவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளர். இலங்கையைச் சேர்ந்த...

வடமாகாண பட்டதாரிகளுக்கான அவரச ஒன்றுகூடல் நாளை நல்லூரில்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் வருகின்ற நாளை ஞாயிற்றுக்கிழமை(03.07.2016) அன்று காலை 10.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின்போது வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட 1000 பட்டதாரிகளை வடமாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நாடளாவியரீதியில்...

பாலியல் துஸ்பிரயோகம்; வரணி ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வரணிப் பகுதி பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் சம்பவத்தை மறைப்பதற்காக செயற்பட்ட பழைய மாணவர்களது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை...

அரச வைத்தியர்கள் சங்கம் திங்களன்று பணிப்பகிஷ்கரிப்பு

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி சட்டரீதியான அந்தஸ்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் சங்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் பணிபுரியும்...

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நாளை முதல் வேலைநிறுத்தம்

தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. தனியார் பேருந்து கட்டண மறுசீரமைப்பு தொடர்பான தேசிய கொள்கை படி தனியார்...

காணி இல்லாதோருக்கு கீரிமலையில் காணி!

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடந்த 28 வருடத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாமில் வாழ்ந்து வந்த மக்களுக்கு முதற்கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது. 28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து தற்போது குடும்பப் பெருக்கத்தினால் பலர் காணியின்றி முகாம்களிலே வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய மக்களுக்கே கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன....

யாழ்ப்பாணத்தில் காணிகளை விடும் அரசு முல்லைத்தீவில் அபகரிக்கின்றது

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக காணிகளை அபகரித்துவருவதாக வடக்குமாகாண மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி குற்றம்சாட்டியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் நடைபெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், வடக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று 18...

போராளிகளின் மர்ம மரணம் தொடர்பாக கூறுவதற்கு நான் வைத்தியனல்ல: டி.எம்.சுவாமிநாதன்!

இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் பலர் மர்மமாக மரணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வினவியபோது ‘இது பற்றிக் கூற நான் வைத்தியனல்ல’ எனவும் தன்னிடம் இதுபற்றிக் கேட்பதில் எந்தவித பயனுமில்லை எனவும் எனத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பல...

ஐ.நாவின் புதிய நிலைப்பாட்டை வரவேற்கிறது கூட்டமைப்பு!

மனித உரிமைகள் கவுன்ஸிலின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. எம்மைப் பொறுத்தமட்டில் அவரது வாய்மூல அறிக்கையிலே இலங்கையின் நல்லிணக்கம் மற்றும்...

போதைப் பாவனையால் யாழ். நகர பாடசாலை மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது! நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நகர்ப் புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது எனக் கவலை வெளியிட்டுள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அத்தகையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது. நூறு...

ஐ.நா மனித உரிமை ஆணையர், நீதியமைச்சர் சந்திப்பு!

ஜெனிவாவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று முன்தினம்(30) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் செய்த் ராத் அல் ஹுசைனை சந்தித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் 32 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜெனிவாவுக்கு சென்றுள்ள அமைச்சர் ஆணையாளருடன் நடைபெற்ற சந்திப்பில் நாட்டில் நிலவும் மனித உரிமை...
Loading posts...

All posts loaded

No more posts