வட மாகாண தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

வடக்கு மாகாணம் மற்றும் சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. வடமாகாண ரீதியில் இன்று முதல் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இணைந்த நேர அட்டவணை அமுலாக்கத்தில் காணப்படும் இழுபறி நிலையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு காரணம் என வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க...

காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையம், 27 வருடங்களின் பின் சொந்த இடத்தில்

காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை சொந்த இடத்திற்கு சென்றுள்ளது. இன்று வரை காங்கேசன்துறைக்கான பேரூந்து சேவையானது படிப்படியாக மீள கையளிக்கப்பட்ட பகுதியான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பேரூந்து தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக்...
Ad Widget

தெல்லிப்பளை பிரதேசத்தில் 5, 100 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கையிருப்பில்

தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 5 ஆயிரத்து 100 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை மீளக்கையளிக்கப்பட்டன. இந்தநிலையில் தெல்லிப்பளை பிரதேசசெயலர் பரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5100 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வல்லை, தெல்லிப்பளை, அராலி வீதியை அண்மித்த...

“இலங்கைத் தாய்க்கு தமிழர்கள் பாரமில்லை”

நடந்து முடிந்த 30 வருட யுத்தத்தில் யாரும் வெற்றிபெறவில்லை. இதனால், மக்கள் அனுபவித்தது வேதனை மட்டுமே. தற்போது நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது. இலங்கை உங்களுடைய சொந்த பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்து வாழும் பூமி. உங்கள் காணி உங்களுக்கு வழங்கப்படவேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாதுகாப்பு தலைமையகத்தினால், உயர்பாதுகாப்பு வலயம் என்ற...

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப்...

புதிய மின்சார கட்டண முறை

மின்சாரம் பயன்படுத்தும் காலத்தின் அடிப்படையில் கட்டணத்தை அறவிடுவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பிரகாரம் காலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரை மற்றும் இரவு 10.30 மணிமுதல் காலை 5.30 மணிவரை என இரண்டு காலப்பகுதிகளாக...

 விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம்...

அரசுடன் நேரில் பேசுவதற்கு குழு அமைத்தது கூட்டமைப்பு!

அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசுடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் குழுவொன்றை நியமித்துள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா...

மதுவுக்காக அதிகம் செலவிடும் மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடம்- ஜனாதிபதி

நுவரெலியா மாவட்டம் மது பாவனையில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில், மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று (26) காலை 10.00 மணிக்கு நுவரெலியா...

சீனிக்கான வரியை அதிகரிக்க யோசனை

சீனி உற்பத்தி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள் மக்களுக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனிக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என தான் முன்னதாக தெரிவித்திருந்த போதும், அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதாக அவர்...

பொருளாதார மையம் தொடர்பில் வடக்கில் பொதுகருத்து ஏற்பட வேண்டும்

“வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதில் வடமாகாண முதல்வர், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதை வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிந்துக்கொள்ள அரசாங்கம் காத்து கொண்டு இருக்கிறது” என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...

வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு

வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற...

புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழப்பு

பம்பலபிட்டிய பிரதேசத்தில் ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். பேலியகொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, வெள்ளவத்தையில்...

பிரபாகரன் சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த அடையாளம் தெரியாமல் போயிருப்பார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார். பிரபாகரனின் மௌனம் மஹிந்தவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். இனவாதத்தால் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என மஹிந்த உள்ளிட்ட...

தனியொரு மாணவன், மாணவிக்கு பாடசாலையில் விசேட வகுப்பு நடத்த தடை!

தனியொரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர மற்றும் விடுமுறை நாள் விசேட வகுப்புக்களை பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா...

அரசுக்கு எதிராக மகிந்த அணி நடத்திய பேரணி- இரண்டு எம்.பிக்கள் படுகாயம்!

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, காயமடைந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மத்திய வங்கியின் ஆளுநருக்கு பதவி நீடித்து வழங்கக் கூடாது மற்றும் வட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த மாணவர்கள்!!

மட்டுவில் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த பாடசாலை மாணவர்கள் மூவரில் பிரதான சந்தேகநபரான மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்குமாறு வியாழக்கிழமை (23) உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், ஏனைய இரு மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி பிணையில்...

வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு

கடந்த யுத்தகால இடம்பெயர்வுகளுக்கு பின்னர், வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகாரசபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு, யாழ். வணிகர் கழகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்...

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

வவுனியா தீருநாவல்குளத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காணமல் போன நபர், நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேசன் வேலைக்காக சென்ற தீருநாவல்குளத்தை சேர்ந்த பாக்கியநாதன் ஜஸ்டின் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக மனைவியினால் வவுனியா பொலிஸில் புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குடியிருப்பில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வீதியில் அமைந்துள்ள...

போலி நாணயத்தாள் மோசடி: பெண் உட்பட மூவர் கைது

நகையை அடகுவைத்து வங்கியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நான்கு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2 இலட்சம் ரூபாய், போலி நாணயத்தாளாக வழங்கப்பட்டது என பெண் ஒருவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொலிஸார், மூவரைக் வியாழக்கிழமை (24) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார்,இன்று...
Loading posts...

All posts loaded

No more posts