Ad Widget

தனியார் துறையினருக்குரிய வேதனம் 2500ரூபா உயர்த்தாவிட்டால் முறையிடலாம்!

வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதா என ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் பி.எஸ்.பத்திரன தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத் திணைக்களத்தினால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த 2500ரூபா வேதன உயர்வு கிடைக்காத தனியார் துறையினரை இக்குழுவிடம் முறையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தக்குழுவிற்கு 200 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts