Ad Widget

யாழில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ் சிறைச்சாலைகளிலுள்ள சில கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களே தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி, இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெரனிய குறிப்பிட்டுளளார்.

இன்று காலை ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 36 கைதிகள் இணைந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

எனினும் அவர்களில் 18 பேர் தற்போது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக, துஷார உபுல்தெரனிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts