- Saturday
- March 7th, 2026
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காணியை தேர்வு செய்யும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்து...
மானிப்பாய் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றினால் தனக்கு வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாய் நாணயத்தாள்கள் போலியானது' என்று கூறி, இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை (23) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த மேற்படி பெண் ஆனைக்கோட்டையிலுள்ள தனது தங்கையின் திருமணத்துக்காகச் சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட அவசர பணத்தேவை காரணமாக, தனது தாலிக்கொடியை...
நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிர்காலத்தில் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளால் தினமும் 8 பேர் பலியாவதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரில் அதிகளவானோர் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்படுவதால் முதலுதவி பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பட்டா ரக வாகனம் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் ஒருபடுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். வண்ணார் பண்ணை சிவன் கோவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த தேவராசா நிரோசன் (வயது 17) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார். யாழ். மத்திய...
வடமாகாணத்தில் கடந்த காலத்தில் அசாதாரண சூழல் காரணமாக (போர்காலத்தில்) கால்களை இழந்த 310 பேர்களுக்கான மாற்றுக்கால்களை வழங்கும் நிகழ்வு இன்று யாழ் இலங்கை வேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக யாழ் இந்திய உதவி துணைத் தூதுவர் அ.நடராஐன் மற்றும் மாவட்ட ரொட்றிக் கழக ஆளுநர் பி.வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் யாழ்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பதிலளித்துள்ளார். குறித்த வியடம் தொடர்பில் பல்வேறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வௌியான போதும், அது கொத்து குண்டுகளா என்பதோ, இலங்கை இராணுவம் அதனை பயன்படுத்தியதா என்பதோ தெரியவரவில்லை என அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
யாழ். நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் ஐவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஆசிரியரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டார். ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள்...
யாழ்ப்பாணத்தில் இருந்து TKS Production மற்றும் Universal Entertainment உருவாக்கத்தில் Free யா? பாடல் வெளியாகியுள்ளது. இயக்கம் - சுஜீந்திரனின் ஒளிப்பதிவு - வின்சன் குரு Editing - ஜெய் லோகேந்திரா நடன அமைப்பு -R.H.Jans கலை அமைப்பு - சாரங்கன் பாடலை எழுதிப் பாடியுள்ளார் நவாலியூர் கபில்ராஜ் இசை- சிவன்ஜீவ் சிவராம்.
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தபோது அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென பாடசாலையின் அதிபர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தற்போது பாடசாலைகளில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து விளக்கமளிக்கும்போதே யாழ்.அரச அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான...
வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இரகசிய முயற்சிகள் நடந்து வருகின்றன. விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்யை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டுமென கோரியே இவ் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை வவுனியா றோயல் காடின் மண்டபத்தில்...
பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெற்றது. கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய...
வவுனியாவில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வவுனியாவிலுள்ள பிரபல அரிசியாலையான எஸ்.எஸ். ஆர் அரிசி ஆலையின் உரிமையாளரான சண்முகம் செல்வராசா நேற்று முன்தினம்(செவ்வாய்கிழமை) இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டார். அரிசி ஆலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிந்த சந்தர்ப்பத்திலேயே வீட்டிலிருந்து 10 மீற்றர் தொலைவில் வைத்தே அவர் கடத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் நேற்று...
தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் விஜய்குமார் ஐ.பி.எஸ். இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக...
இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். கரிகாலன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திய அவர், 2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து அடைக்கலம் தேடினார். சிறிலங்காவில்...
இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள அகதிகளுக்கு, ஏறத்தாழ 1.15 பில்லியன் ரூபாயை (65 மில்லியன் குரோனர்) வழங்குவதற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே தெரிவித்தார். இந்த உதவி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக (யு.என்.டி.பி) வழங்கப்படும் எனவும்,...
மருத்துவ சேவைக்கான வற் வரியை மருந்து வகைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் உள்ளிட்ட வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு இதற்குப் பதிலாக புகையிலை நிறுவனங்களிடம் வரியை 90 வீதம் அறிவிட தீர்மானித்துள்ளோம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில்...
126 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் 300 கிராம் கஞ்சாவுடன் மற்றொரு நபரையும் யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குருநகர் சவற்காலை சந்தியில் வைத்து, அதே இடத்தினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் 126 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், சொலமன் வீதி...
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன...
யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும்...
போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளாமையைக் கண்டித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே உள்ளக விசாரணையைக் கருத்தில்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விசாரணைகள்மூலம் நீதியை நிலைநாட்டுவதற்குரிய சூழல் தற்போது நாட்டில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை....
Loading posts...
All posts loaded
No more posts
