Ad Widget

கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றது.

அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியாசலையில் சேர்க்கப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வடமாகாண பொருளாதார மத்திய நிலையம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளன.

Related Posts