மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்: அனுமதியோம் என்கிறது அரசு!

கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மாவீரர் வாரத்தை எவ்வித இடையூறும் இன்றி அனுஷ்டிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். உரிமைகளுக்காய் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்காக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதற்கென...

பெரும்பான்மை இனத்திற்கும் அரசியல் தீர்வு அவசியம்: சம்பந்தன்

அரசியல் தீர்வென்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை இனத்திற்கும் அரசாங்கத்திற்கும் அவசியமான ஒன்றென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாவகச்சேரியில் திறந்துவைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்,...
Ad Widget

வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கப்படும்: சுவாமிநாதன்!

வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான வீட்டுத் திட்டம் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை...

காஸ்சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழப்பு

காஸ் சிலிண்டர் வெடித்ததில் மூதாட்டியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலக்கம் 302 கோவில் வீதி நல்லூரைச் சேர்ந்த சின்னத்தம்பி கொழுந்தியா என்ற 70 வயது மூதாட்டியொரு வரே உயிரிழந்தவராவார். எரிகாயங்களுக்குள்ளான குறித்த மூதாட்டி யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் போது வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி...

தமிழரின் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு புரியவைத்தவர் ரவிராஜ் :ராஜித

ரவிராஜ் தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி சிங்கள மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தார். சிங்கள மக்கள் விளங்கக்கூடிய வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறினார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்ற அமரர் ரவிராஜின் 10ஆவது ஆண்டு நினைவுதினத்தில் உரைய்ற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது...

மாமனிதர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு

கொழும்பு - நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் . நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி...

உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை உண்டு

'எமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை, எமக்கு உண்டு. அதனை, கடந்தகால அரசாங்கம் போன்று, தடையை ஏற்படுத்தியோ நினைவுநாளை அனுஸ்டிப்பதனை தடுத்தாலோ, நல்லாட்சியின் முகத்திரை கிழியும்' என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் கடந்த சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்....

சா/த மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்த தடை

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளுக்கு நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரணத் தரப்பரீட்சை டிசெம்பர் மாதம் 6ஆம் திகதியன்று ஆரம்பமாகி, டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றது. இதேவேளை,...

வடமாகாண பாடசாலை நேரத்தில் மாற்றம்

வடமாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும், ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 07:30 க்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 01:30 க்கு முடிவடையும்...

மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும்! புதிய அரசியலமைப்புக்கான சித்தார்த்தன் குழுவினர் அறிக்கை.!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உபகுழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குழுவின் தலைமையிலான குழுவின்  இடைக்கால அறிக்கையில் மாகாணசபைகள் உள்ளுராட்சிசபைகள் சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு இன்று அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபை மற்றும்  உள்ளுராட்சிக்கட்டமைப்புக்களை பலப்படுத்தி அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வேண்டும்...

மரநடுகை மாதத்தை முன்னிட்டு வல்லை வெளியில் மரநடுகை

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வல்லை வெளியின் இருபுறங்களிலும் இன்று சனிக்கிழமை மரங்களை நடுகை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தொண்டைமானாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவியொருவர் முதலாவது மரக்கன்றை நாட்டி மரநடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார். தொண்டைமானாறு கடல்நீரேரி ஊடறுத்துச் செல்லும் தாழ்வான பகுதியாக வல்லைவெளி...

ஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர் : முஸ்லிம் கவுன்சில் கண்டனம்!!

ஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர் இணைந்துள்ளதாக பாராளுமன்றில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று தெரிவித்த தகவலுக்கு முஸ்லிம் கவுன்சில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொது மக்களை தவறாக வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இலங்கையர் தொடர்பில்...

மாணவர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள தடை

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களிடமிருந்து, ஆசிரியர்கள் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விழாக்கள் மற்றும் பிறந்த நாள் நிகழ்வுகளின் போது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெறுமதியான பரிசுபொருட்கள் வழங்குவது வழமையாக இருந்து வருகின்றது. எனினும் அடுத்த வருடம் முதல் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் யாரும் பரிசுப் பொருட்கள் வழங்கக் கூடாது என கல்வி அமைச்சர்...

வடக்கில் பொருத்து வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு சுவாமிநாதன் முயற்சி!

வடக்கில் பொருத்துவீடுகளை திணிப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பிர்கள் பலர் உள்ளபோதிலும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான டி.எம்.சுவாமிநாதன் ‘ஏஜன்ட்’ போன்று செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் வாசிப்பின்போது உரையாற்றுகையிலேயே...

13 ஊடகவியலாளர்கள் படுகொலை!

2006 ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில், அரசாங்கம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பியின் எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி...

வரவு செலவு திட்டத்தில் வடக்கிற்கான ஒதுக்கீடுகள் வெறும் கண்துடைப்பே: மாவை

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்படி வடமாகாணத்திற்கான பாரிய அபிவிருத்தி என்பது வெறும் கண்துடைப்பு மாத்திரமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பிரதமர்...

பிறந்த நாளில் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நேற்று தனது பிறந்த நாளில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இணையத்தளத்தை http://www.mahindarajapaksa.lk/ ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டம் தேவையற்றதொன்றாகும்: சுரேஷ்

வடக்கில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுபர்களாக இருப்பின் அவர்கள் இலங்கையின் பாரிய குற்றங்களுக்கான சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படலாம். அதைவிடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதானது தேவையற்றதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தொடரும் கைதுகள் தொடர்பிலும் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

வடக்கில் மாணவர்களின் கல்வியைக் குழப்ப சதிகாரக்கும்பல் முயற்சி; சீ.வி. விக்னேஸ்வரன்

வடமாகாண மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு, தேவையற்ற பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்காக பொலிஸாரும் மக்கள் குழுக்களும் முயற்சி செய்கின்ற போதும், மாணவர்களில் சிலரும் வேறு சதிகாரக் கும்பல்களும் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் –...

கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியினை பயிரிட்ட ஒருவரை யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மணியம் தோட்டம் பகுதியில் ஒருவர் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் றப்பர் சாடியினுள் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மூன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்டிருந்த கஞ்சா செடிகளின் பெறுமதியானது ஐயாயிரம்...
Loading posts...

All posts loaded

No more posts