வடமாகாண சபை உறுப்பினருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் முறுகல்!

வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது. குறித்த முறுகல் நிலை வவுனியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, வாகனம் ஒன்றில் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்...

விசர்நாய் கடிக்கு உள்ளானவர் 5 மாதங்களின் பின் உயிரிழப்பு

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விசர்நாய் கடிக்கு உள்ளான நிலையில், உரிய மருத்துவ சிகிச்சை பெறத்தவறிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தில், அரியாலை யாழ்ப்பாணம் பகுதியினைச் சேர்ந்த சின்னத்துரை சிறிஅன்பழகன் (வயது 64) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு...
Ad Widget

விபத்தில் ஐவர் படுகாயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, பஸ்ஸூக்கு காத்திருந்த முதியவர்கள் மீது மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஐந்து பேர், காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மதியம், மந்திகை சந்தியில் ஏற்பட்ட இந்த விபத்துச் சம்பவத்தில் கே.யோகராஜா (வயது 57), டி.உருத்திரகுமார் (வயது 57), ஏ.சிவனேஸ்வரராஜா (வயது52), எஸ்.தங்கவேல்...

திறமைக்கு பேதங்கள் இல்லை! பொலிஸ் துறையில் தமிழர்கள் இணைவது அவசியம்

திறமைக்கு மொழி, சமயம் அல்லது ஆண், பெண் என்ற பேதங்கள் இல்லை எனவும், அவ்வாறான பேதமற்ற, திறமைக்கு முன்னுரிமையளிக்கும் நிலையை பொலிஸ் துறையில் உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். இங்கு மேலும் அவர்...

6 வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதம் ரூ.25,000 வரை அதிகரிப்பு

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி...

வௌ்ளைக் கோடுகளாக மாறவுள்ள மஞ்சள் கோடுகள்

இலங்கையில் பாதசாரிகள் வீதிகளைக் கடக்க இடப்பட்டுள்ள மஞ்சள் கோடுகள் அனைத்தையும் டிசம்பர் மூன்றாம் திகதி முதல் வௌ்ளைக் கோடுகளாக மாற்ற தீர்மானித்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டம் டிசம்பர் 3ம் திகதி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் இந்த நடவடிக்கையை செயற்படுத்தவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின்...

வடக்கு,கிழக்கில் பொலிஸ் சேவையில் 80 வீதமான தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும்!

நான் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் ஊடாக அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பொலிஸ் சேவைக்கான ஆளணி உள்வாங்கப்பட்டு, பணிகளில் அமர்த்தப்படுவதன் ஊடாக அந்தந்த பகுதிகளின் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவது இலகுவாக...

யாழ். மாவட்டத்தில் 138 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 138.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இக்காலநிலை இன்னும் மூன்று தினங்களுக்கு தொடரும் எனவும் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன், திங்கட்கிழமை (21) தெரிவித்தார். நாட்டில் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகிறது. கடந்த 20ஆம் திகதி காலை 8.30 மணியில்...

அவுஸ்திரேலியாவில் நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிநெறி

ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். வடக்கில் நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகள்...

இராணுவத்திடமுள்ள காணியை விடுவிக்க விரைவில் நடவடிக்கை

இராணுவத்தினரின் வசத்திலுள்ள, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு திங்கட்கிழமை விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, யுத்த பாதிப்புக்கு உள்ளாகிய மேற்படி...

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விசாரணை!

கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 முறைப்பாட்டு மனுக்களை விசாரிக்கும் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட சிலர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக எமது செய்தியாளர்...

இடியுடன் கூடிய மழை தொடரும்!

நாட்டின் தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் மத்திய, சப்ரகமுவ, மேல், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை...

இனப்பிரச்சினைக்கான தீர்வு உயிர் தியாகம் செய்த ஆன்மாக்களினால் வலுப்படுகின்றது

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்ற கொள்கையை வலிறுத்தி உயிர் தியாகம் செய்த தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் ஆத்மாக்களினால் இன்றும் அந்த கொள்கைகள் வலுவூட்டப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நடராஜா ரவிராஜ் உள்ளிட்ட பலரின் ஆத்மாக்களுக்கு நன்றியாக செயற்படுவதுடன் அவர்களின் இலட்சியத்திற்காக தொடர்ந்தும்...

ஆயுதப் போராட்டத்தால் முடியாததை மென்வலு அரசியலால் சாதித்துள்ளோம்; சுமந்திரன்

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வன்வலுவை விட மென்வலு அரசியல் நடவடிக்கைகளின் மூலமே பல வெற்றிகளை ஈட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை மென்வலு அரசியல்வாதி என்று அழைப்பதை பெருமையாகக் கருதுவதாகவும் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற...

சங்கிலியை அபகரித்த இருவர் கைது

நவக்கிரி, ஈவினை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை வீதியால் சென்ற பெண்னின் 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அச்சுவேலிபொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நெல்லியடி கரவெட்டி பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினார். வீதியால் சென்ற குறித்த பெண்னை இடைநடுவில் மறுத்து, கைப்பையினை...

பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முயற்சி!!

யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது, மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5...

வடக்கு கிழக்கில் தற்போதும் படையினரின் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமேயுள்ளது.- மாவை எம்.பி

கடந்த 18ம் திகதி மாவை எம் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரையின் முழுவடிவம். 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது உரையில் கூறியிருந்தார். சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதும் அந்த சலுகைகளில் எவ்வாறு நடைமுறை ரீதியில் வழங்க முடியும் என்ற கேள்வி எமக்குள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகள்...

ஆணைக் குழுக்கள், நீதி மன்ற கட்டமைப்புகள் அரச ஸ்தாபனங்களில் மூவினப் பிரதிநிதிகள் அவசியம்!

ஆணைக் குழுக்களை அரசு ஏற்படுத்துகின்றபோது அவற்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் பிரதிநிதிகளை நியமிப்பது அவசியமாகும். அத்துடன், அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளிலும் மேற்படி மூவின மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் பிரதிநிதித்துவங்கள் அவசியமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம்,...

மக்கள் சிந்தனையாளன் ஐங்கரநேசனும் மக்கள் சிந்தனையற்று சுயநலமாச் செயற்படும் மனப்பிறள்வாளர்களும்!: சு.பசுபதிப்பிள்ளை

ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை...

மோட்டார் சைக்கிள் விலை விரைவில் அதிகரிப்பு?

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட புதிய வரி முறைமையினால், மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு வீதம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லையென மோட்டர் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் இதுவரையில், பழைய விலையிலேயே இறக்குமதி செய்து விற்பனை செய்து...
Loading posts...

All posts loaded

No more posts