இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன், விபத்தொன்றில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக புதன்கிழமை (07) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பாண் விற்பனையில் ஈடுபடும் சிறிய ரக வானுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.