மட்டு அம்பாறையில் கல்வி மேம்பாட்டிற்காக ஏழுலட்சம் பெறுமதியான உதவி வழங்கல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள இருட்டுச்சோலைமடு விஸ்ணு வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலய முதல்வர் திரு. ரூபஸ் பெனாண்டோ தலைமையில் கடந்த 09-11-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய வலயக் கல்விப்பணிப்பாளர் திரு க. சத்தியநாதன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் திரு.தர்மலிங்கம்...

வடக்கில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

வடக்கில் கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட நால்வரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா பொலிஸார் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் கைக்குண்டு 2, கத்திகள் 4, 28 பவுண் தங்க நகைகள், முகத்தை மூடி மறைத்துக் கட்டும்...
Ad Widget

அணுமின்நிலையம் அமைக்க இடம் தேடுகின்றது அரசாங்கம்!

சிறீலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினைத் தேடி வருவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அஜித் பெரேரோ தெரிவிக்கையில், அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடம் இன்னமும் தெரிவுசெய்யப்படவில்லை. அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்புடன் இணைந்து அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தினை தெரிவுசெய்யும் பணியில் சிறீலங்கா...

வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது

'வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு' என, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை...

பாடப்புத்தகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படும் தமிழர் வரலாறு

பாடசாலை மாணவர்களின் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார். சில புத்தகங்களையும் தம்வசம் கொண்டுவந்த சிறிதரன் அதனையும் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். மாணவர்கள் மத்தியில் அந்நிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் தவறான விடயங்கள்...

க.பொ.த. உயர்தரத்தில் 24 பாடங்களை பயில கணிதம் சித்தி அவசியமில்லை

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம் சித்தியடையாத மாணவர்களும், கலைத்துறையில் தரம் 13 வரை கல்வி பயில்வதற்கு ஏதுவாக, புதிதாக 24 பாடங்களை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று (22) கல்வி அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். ரெபோடெக் தொழில்நுட்பம் உட்பட 24 பாடங்கள் இதன்போது அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு...

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார்!!

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மாணவர்கள் பலர் ஒன்றுகூடிய நிலையில், சுமார் இரவு 11 மணியளவில் திடீரென விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஏனைய மாணவர்களின்...

21 அகதிகள் நாட்டை வந்தடைந்தனர்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 21 பேர் யு. என். எச். சி. ஆர் அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணிக்கு, விமான மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த...

ஜனாதிபதிக்கும் மாகாண முதலமைச்சர்களுக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்குமிடையில் நேற்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஜனாதிபதியின உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தகலந்துரையாடலில் நிதிஅமைச்சர் ரவிகருணாநாயக்கவும் கலந்துகொண்டார். இங்கு மாகாணமட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் எதிர்காலதிட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது மாகாண அமைச்சர்கள் தமது...

வவுனியாவில் முன்னாள் காவல் துறை அதிகாரி மர்மமான முறையில் கொலை

வவுனியாவில் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் அவருடைய வீட்டின் முன்னால் அவர் சடலமாகக் கிடந்ததை, அவருடைய வீட்டிற்கு மணல் ஏற்றிச் சென்ற வாகன சாரதியொருவர் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையில் பணியாற்றியிருந்து, இப்போது ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுள்ள 59 வயதுடைய விக்கிரமரட்ன...

தமிழ் மக்கள் பேரவையின் கொழும்பு ஊடகவியலாளர் மாநாடு(Video)

இன்று(22) கொழும்பில் நடைபெற்ற  வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின்  பத்திரிகையாளர் மாநாட்டில் நடந்தது என்ன? https://www.facebook.com/virakesari/videos/10158046197130019/ நன்றி வீரகேசரி இணையம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் மாற்றங்களை செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மூலம்...

வடக்கில் முளைக்கும் விகாரைகள் தொடர்பில் அலட்டிக் கொள்ள தேவையில்லை ; டி.எம்.சுவாமிநாதன்

தமிழர் பிரதேசங்களில் பலவந்தமாக வைக்கப்படும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் இந்து மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வரை அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் அனைத்து மதத்தினரதும் வழிபாட்டுத் தளங்களும் இருக்கும் நிலையில், வடக்கில் பௌத்த விகாரைகள் இருப்பதில் எந்தத்...

வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான்,...

பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு

பெண்ணொருவரின் 4½ பவுண் தாலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம், பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த மேற்படிப் பெண்ணைப் பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், யாரும் இல்லாத நேரம் பார்த்து தாலிக் கொடியினை அறுத்தெடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை...

விடுவிக்கப்பட்ட காணியில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் விடுவிக்கப்பட்ட காணியில் இருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மிதிவெடிகள் இரண்டும் எறிகனை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மழைகாலம் என்பதால் நீர் நிரம்பி இருக்கும் இடங்களை துப்பரவு செய்யும் போது இவை மீட்கப்பட்டுள்ளன. பொஸிஸ் விசேட பிரிவினருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து மீட்கப்பட்ட...

கனேடியத் தமிழருக்கு நஸ்டஈடு வழங்க இலங்கைக்கு உத்தரவு

கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தபோது, சித்திரவதை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில், நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு இலங்கைக்கு தீர்ப்பளித்துள்ளது. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ரோய் சமாதானம் (46) என்பவர், 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் நாட்டுக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில்...

முகநூல் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்!

முகநூல் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என இந்தக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஆவா குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி...

நல்லிணக்கத்து பங்கம் விளைவித்தால் உடன் கைது!

மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களைத் தூண்டி விடுபவர்களை விசாரணை செய்ய...

சம்பந்தனுக்கு பாதுகாப்பு வேண்டும்!! த.தே.கூ உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கோரிக்கை

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்போதுள்ள வதிவிடத்தில் எதிர்கட்சித் தலைவர் வசிப்பதாக வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்...
Loading posts...

All posts loaded

No more posts