Ad Widget

டக்ளஸ் தேவானந்தா எத்தனைபேரை இல்லாமல் செய்தார் என எங்களுக்கு தெரியும்

ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலத்தில் எத்தனைபேரை இல்லாமல் செய்தார் என எங்களுக்கு தெரியும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பெரியதம்பனை கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) கிராமிய சுகாதார நிலையத்தை திறந்து வைத்த பின், அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலம் கூறுகையில்,

மாகாணசபையிலும் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதித்தனர். அமைச்சர்களை பாரதூரமாக மனம் நோகடிக்கக்கூடிய வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நான் முற்றாக மறுக்கின்றேன்.

அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற வரவு செலவுத்திட்டத்தில் கூட டக்ளஸ், ஊழல் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார். டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

என்ன ஊழல் செய்தார், எத்தனை நிதியம் வைத்திருந்தார், எத்தனை பேரை கொலைசெய்தார், எத்தனைபேரை இல்லாமல் செய்தார் என்பது எங்களுக்கு தெரியும். நேற்றும் அவர்கள் செய்த வேலைக்கு அவரது கட்சியை சேர்ந்த மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர் எம்மை விசாரிக்கவேண்டம் என்றால் முதலில் நாம் அவருக்கு என்ன செய்யவேண்டும் என பார்க்கவேண்டும். இவ்வாறானவர்கள்தான் அரசியல் நோக்கத்திற்காக தேவையில்லாத விடயங்களை கொண்டு வருவார்கள். என தெரிவித்தார்.

Related Posts