Ad Widget

யாழ் மக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் சமர்ப்பிக்க முடியும்

யாழ் மாவட்ட பொதுமக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றை வழங்குபவர்கள் தொடர்பிலான விபரங்கள பாதுகாக்காக்கப்படும் என்றும் இதனால் பிரச்சினை குறைகளை பயமின்றி துணிந்து வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமூக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகம் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் குறைகேள் நிலையம் தொடபாகவே மேலதிக அரசாங்க அதிபர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமூக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக அரச உத்தியோகத்தர்கள் அரப்பணிப்புடனும் பற்றுதியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை உடனடியாகவும் பக்கச்சார்பற்ற முறையிலும் நிறைவேற்றுவதற்கு மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது இவ் அலகிற்கு கடிதம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துடையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த குறைகேள் மையத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கும்போது சம்பவம் தொடர்பான துல்லியமான தகவல்களையும் புகைப்படம் காணொளி போன்ற ஆதாரங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் தகவல்கள் தொடர்பாக இரகசியம் காக்கப்படவேண்டிய சந்தர்பங்களில் அவை தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலதிக அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts