- Monday
- May 11th, 2026
யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2017ஆம் கல்வி ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியல், நிர்மாண தொழில்நுட்பவியல், கணிய அளவையியல் தொழில்நுட்பவியல், மோட்டார் வாகன தொழில்நுட்பவியல், தேசிய கணக்கீடு, ஆங்கிலம் மற்றும் கல்வியியல் போன்ற கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் ஐனவரி மாதம் (13)...
எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலட்சியம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர்களின் சங்கத்துக்கு, கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயன், தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“ சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு ஆலய பங்குத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இத் துறைமுகம்...
போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவண சோதனையின் போது, போல கடவுச்சீட்டு...
மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் தொன்மையயை வெளிப்படுத்தும் தொல்பொருட் சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைகழக தொல்லியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்காட்சிக்கூடத்தை யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் நேற்று காலை திறந்து வைத்தார். சுமார் ஆறு மாதகாலமாக மன்னார் கட்டுக்கரை பகுதியில்இ யாழ் பல்கலைக் கழக தொல்லியல் துறை...
யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வரி தொடர்பான திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 23ம் திகதி முதல் தங்களது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையினை மனிதாபிமான முறையில் பரிசீலித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கூடிய நடவடிக்கையினை எடுத்து உதவுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு...
தென்னிலங்கையிலிருந்து வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் செயற்கைக் கள்ளுக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மாகாணசபைக்குட்பட்ட பனை, தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளுக்கும் உடனடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை மன்றில் முன்மொழிந்து கருத்துத் தெரிவிக்கையில், மாகாண பனை,...
கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் புதன்கிழமை (28) மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் சென்ற வேளை சில இளைஞர்கள் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர். இவ்விடயம் சிறுவர்...
யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போது வரை 4600 ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைத்து கொடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களின் ஊடாக பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வவுனியா, கற்பகபுரம் கிராமத்தில் 370 குடும்பங்களுக்கு...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு நிறுவனங்கள் செய்யும் உதவிகள் இன்றியமையாததாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.ஒ.சி நிறுவனத்தின் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு பாசையூரில் அமைந்துள்ள யாழ். மாநகர சபையின் ஆரம்ப சுகாதார நிலையம் புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் உரையாற்றும் போது...
“இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துக்கு அடிபணிந்து, கோரிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தினால், வடபகுதி ஸ்தம்பிக்கும் வகையிலான பாரிய போராட்டத்தினை முன்னெடுப்போம்” என்று, வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம், எச்சரிக்கை விடுத்தது. யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அச்சம்மேளனம், மேற்கண்டவாறு குறிப்பிட்டது. “நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31), கொழும்பில் நடைபெறவிருந்த...
மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கத்தின் செலவில் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனுக்கு, அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லமொன்று, இதுவரை...
2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள்...
2017ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரையில் தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்போகும் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடிவும் அமையும் எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச்...
அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுனான சந்திப்பு ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார மண்டபத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா, ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் தமிழ்மக்களையும் ஐ.நா.தீர்மானத்தினையும் ஏமாற்றினால் தென்னிலங்கையில் ஆட்சியினை நடாத்தாது தடுக்கும்...
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமஷ்டியைக் கோரவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர உட்பட சில முக்கியமான அரசாங்க தரப்பினர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கணித்திருந்தார். இவ்விரு விடயங்கள் தொடர்பாக வினவியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...
மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்பு, விவசாய மற்றும் கடல்தொழில் சார்ந்த இடங்கள் யாவும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பகுதியை...
Loading posts...
All posts loaded
No more posts
