Ad Widget

நந்திக்கடல் பகுதி விடுவிக்கப்படமாட்டாது! : ராணுவம்

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதி படைத் தேவைக்கு அவசியமென குறிப்பிட்டுள்ள ராணுவம் குறித்த பகுதி விடுவிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது. படைத் தேவைக்காக இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிப்பதாக ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை அழைத்திருந்த ராணுவத்தினர் அச் சந்தர்ப்பத்தின் போதே நந்திக்கடல் குறித்தும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, படை முகாம் அங்கிருந்து அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த காணி மக்களிடம் கைளிக்கப்படும் எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஈழப் போரின் இறுதிச் சமரில் நந்திக்கடல் முக்கிய பங்கை வகிக்கின்றது. குறிப்பாக நந்திக்கடல் பகுதியிலேயே விடுதலைப் புலிகளின் தலைவரது உடல் கிடைக்கப்பெற்றதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts