யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை ஆலடி பகுதியிலுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 100 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சிலை நேற்று மாலை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலை யுத்த காலத்தின் போது இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.