- Thursday
- May 14th, 2026
தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் இந்தமுறை மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மே 01 ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் பெரியளவில் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு...
வயிற்றில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் பத்து நாட்களின் பின் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருந்த போது சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.சண்டிலிப்பாய் மடத்தடியைச் சேர்ந்த மகேஸ்வரன் றெஜிந்தா (வயது 41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார். கடந்த 10 நாட்களுக்கு முன் தனியார்...
யாழில் சில நாட்கள் கட்டுப்பாட்டில் இருந்த வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரினால் வாள்வெட்டிற்கு இலக்கான சம்பவமொன்று மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாள்வெட்டிற்கு இலக்கானவர் மானிப்பாய் கூழாவடி பகுதியைச் சேர்ந்த...
நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் மாயக்கல்லி மலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்த உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில்...
இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் வடபகுதி மீனவர்களின் ஆலோசனைகள் பெறப்படுமென்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்களின் கைப்பற்றப்பட்ட பல படகுகள் எம் வசம் உள்ளன....
முல்லைத்தீவு பகுதியில் இராணுவ பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹர்த்தால் இடம்பெற்ற போது இவ்வாறு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியை கடந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்கு தகவல்கள் தெரியுமா ? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னேடுக்கப்படவுள்ளது. ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....
தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்குமே அடிபணியப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டுத் தலையீட்டைத் தமிழ்த் தலைமைகள் சிலர் கோரி வருகின்றபோதும் அவ்வாறான தேவை இல்லாமல்...
“அரசாங்கத்தை நம்பி இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை விரைவில் வழங்கவேண்டும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 68ஆவது நாளாக (வெள்ளிக்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு...
இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
நீதிமன்றக் கட்டளையை அவமதித்தவர்களை, உடனடியாக கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி, சட்டத்தரணிகள் பலர், திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக, நேற்று காலை கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகள், திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த கட்டளை அடங்கிய ஆவணத்தை, பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன், அதனைக் கிழித்து, காலால் மிதித்தமையை கண்டித்தே, இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு...
வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கள் பல ஒன்றாக இணைந்து வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ள தயாராகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் மே மாதம் 3,4,5 ஆகிய ஏதாவதொரு நாளில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 160 தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று...
மே தினத்தைக் கொண்டாடும் சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தவிரத்துகொள்ளுமாறு ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாரிய அளவிலான பேரூந்துகள் மற்றும் புகையிரதம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நாடளாவிய ரீதியில் மே தின ஊர்வலத்திற்கென ஆதரவாளர்களை குவிப்பதற்காக முற்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை பொலிஸில் பொலிஸ் கான்ஸ்டபிள் / பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் / பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதன்பிரகாரம், விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு பதிவுத்தபாலில் 2017.06.02 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்பதாக விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் தமிழ்...
யாழ்ப்பாணம் கைதடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால், இளம் வயதுடைய இரு பெண்கள், கையில் சிறு குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவி வருகின்றது. இருந்தபோதும் அச்சிறு குழந்தைகளையும் கையில் ஏந்தியவாறு அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, அப்பெண்கள் வீதியில் நின்று யாசகம் கேட்டு வருகின்றனர். ஏ-9 வீதியில் பயணிப்போர் குறித்த...
சுன்னாகம் பொலிஸாரால் கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் என்ற இளைஞன், பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொகுப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்தார். வட, கிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான சுரேஸ்கரன் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து...
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பத்து பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் 6 பிரதேச செயலர்களுக்கும், மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 4 பிரதேச செயலர்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
