Ad Widget

குடும்பப் பெண் மரணம்! : தனியார் வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு!

வயிற்றில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் பத்து நாட்களின் பின் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருந்த போது சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.சண்டிலிப்பாய் மடத்தடியைச் சேர்ந்த மகேஸ்வரன் றெஜிந்தா (வயது 41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிரஸ்தாப பெண் தனது வயிற்றில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்துள்ளார்.

தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்றிருந்த நிலையில் புதன்கிழை காலை உடல் நலக்குறைவுக்கு உள்ளான குடும்பப்பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்து நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சத்திர சிகிச்சை மேற்கொண்ட தனியார் வைத்தியசாலை மீது மரணம் அடைந்த பெண்ணின் உறவினர்களால் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

Related Posts