கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி

நேற்றய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் நேற்ற வடக்கு கிழக்கில் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து...

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் வெற்றி: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலை மக்கள் வெற்றி பெறச்செய்துள்ளனர் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த போராட்டத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் தாயக பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு,ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே...
Ad Widget

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் சம்பந்தன் பிரேரணை!

கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று இடம்பெறவுள்ளது. மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்தோருக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப் பாரிய...

ஜனாதிபதி சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கபட்டுள்ளார். சட்டத்தரணிகளான விவேகாநந்தன் புவிதரன், எம். நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில்...

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேக நபரை தொடர்ந்து விசாரிக்க அனுமதி

பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், சந்தேகநரின் விளக்கமறியலை எதிர்வரும் 5ஆம் திகதிவரை நீடிப்பதாகவும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. தனது வீட்டில்...

A9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக நேற்றம் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி...

பஸ் கட்டணங்கள் இலத்திரனியல் அட்டைகளில்

பஸ்களில் இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களுக்கான தரிப்பிடங்களை நவீனமயப்படுத்தலுக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவிலிருந்து அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் (UNHCR), இலங்கை அகதிகள் 46 பேர், இந்தியாவிலிருந்து நேற்று (27) காலை 11 மணிக்கு மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனரென, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர் 1990ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியா - தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு,...

முப்படைகளின் உயர்பொறுப்பை ஏற்க பொன்சேகாவுக்கு அழைப்பு

நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

மாமனிதர் தராகிசிவராம் 12 ஆம் ஆண்டுநினைவேந்தல்

மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12 ஆவது ஆண்டு நினைவேந்த்ல் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏ-9 வீதியின் கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.ஊடாக அமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடை பெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில்...

எமது கைவிரல்களாலேயே எமது கண்களைக் குத்தவைக்கும் முயற்சியில் இராணுவம் : பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில் பாதுகாப்புப் படையில் இணைந்து பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நாங்கள் வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதம் வழங்கினாலே பண்ணையை விட்டு வெளியேறலாம் என்று இராணுவம் நிபந்தனை விதித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல்...

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கம்

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உபதலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தென்பகுதியில் இருந்துவரும் பேரூந்துகள் அனைத்தும் வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அரசு வெளிப்படுத்தக்கோரி, அதற்கான...

அவுஸ்ரேலியாவில் இருந்து யாழ் வந்த நபரை வெள்ளை வானில் கடத்தி சித்திரவதை!

அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் தெரியவருவதாவது... குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக...

காக்கைதீவுப் பகுதியில் மாடுகளின் கொல்கலன் கழிவுகள் கொட்டப்படுவதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

யாழ்ப்பாணம், காக்கைதீவுப் பகுதியின் அராலி வீதியோரத்தில், மாடுகளின் கொல்கலன் கழிவுகள் முறைகேடாகக் கொட்டப்படுவதனால், குறித்த பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் சேர்க்கப்படும் திண்மக்கழிவுகள் நிறைந்த கல்லுண்டாய் வெளிக்கும் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் மீள்சுழற்சி பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே, இந்தக் கழிவுகள் மதகுடன் கொட்டப்பட்டுள்ளன. இப்பகுதியானது,...

சிவனொளிபாதமலையில் பதற்றம்: புத்தர் சிலையை வைக்க சிங்ஹலே முயற்சி

சிங்ஹலே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை வீதிவரை, பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்ஹலே அமைப்பின் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில், புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகளை...

சுமந்திரன் மீதான கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது...

தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

தந்தை செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தந்தை...

கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை

கடும் வெப்பநிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை குறைப்பது மற்றும் மாணவர்கள் அதிகமாக தண்ணீர்...

தமிழர் தாயகமெங்கும் கருக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தாயகம் தழுவிய மக்கள் போராட்டமாக பரிணமிக்கவேண்டும் : தமிழ் மக்கள் பேரவை

பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் தமது கோரிக்கைகளை வெளியுலகுக்கு வெளிபடுத்தவும் , வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் பேரவை ஆழமான நம்பிக்கை...

வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆதரவு

வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்குமுகமாக 27-04-2017 வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு போராடும் மக்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் கோரிக்கைக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாமும் எமது...
Loading posts...

All posts loaded

No more posts