Ad Widget

மாமனிதர் தராகிசிவராம் 12 ஆம் ஆண்டுநினைவேந்தல்

மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12 ஆவது ஆண்டு நினைவேந்த்ல் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏ-9 வீதியின் கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.ஊடாக அமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடை பெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில், நினைவுரைகளாக “தராகியும் இலங்கையின் பூகோளஅரசியலும்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக ஊடககற்கை, கலைப்பீட இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராமும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்தில் சிவாராம்” என்னும் தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும்,“சிவராமின் கனவு”என்னும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ராதேயனும்,
“நானும் சிவராமும்”என்ற தலைப்பில் மூத்தஊடகவியலாளர் மாணிக்கவாசகரும் உரையாற்றவுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் துணிச்சலுடனும், ஊடகஅறத்துடனும், செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்.ஊடக அமையம் இவ்வாண்டு முதல் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கும் தராகி சிவராம் ஞாபகாத்த விருது மறைந்த கேலிச்சித்திர கலைஞரும்,ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு,கிழக்கில் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருது வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்நிகழ்வில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு,யாழ்ப்பாணத்தை தொடர்ந்து இம்முறை கிளிநொச்சியில் யாழ்.ஊடகஅமையத்துடன் வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து ஊடக அமைப்புக்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவது குறிப்பிடத்தக்கது.

Related Posts